கோவை, மே 31- கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்தி ரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற் பளிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன் றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி, டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாயன்று கோவை வந்தனர். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் களுடன் கலந்துரையாடினர். முன்ன தாக, கோவை விமான நிலையம் வந்த இவர்களுக்கு கேரள மாநிலத் தின் பாரம்பரிய செண்டை மேளம் இசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த இசை நிகழ்ச்சியை கண்டு களித்த பின்னர், பெண் சபா நாயகர் சண்டை மேளம் வாசிக்க, சட்ட மன்ற உறுப்பினர் டேவிட் ஹனி ஜால்ரா இசைக்கருவிகளை வாசித்து உற்சாக மடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பண்பாடு, இங்குள்ள கல்வித்தரம் அறிய வந்துள்ளோம். கோவை மற்றும் கோத்தகிரியில் தனியார் கல்லூரிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டின் கல்வித்தரம் உயர வேண்டும் கல்வித்தரத்தில் வேறுபாடும் மாறுபாடும் இருக்க கூடாது. தமிழ்நாட்டிற்கும் வெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே யான உறவைமேம்படுத்த வேண்டும். கல்வி வேலைவாய்ப்பு சார்ந்த நிகழ்வு கள் நடைபெற உள்ளன. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பி.டி.ஆர் உள்ளிட்ட தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை சந்தித் திருக்கிறோம் என்றனர். கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற வர்கள், பின்னர் புதனன்று கோத்தகிரி சென்றடைந்தனர். உதகை இதையடுத்து நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கண்ணேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, படுகர் இன மக்கள் ஆடல், பாடலுடன் உற் சாக வற்வேற்பு அளித்தனர். இதை யடுத்து நவீன நீலகிரியை உருவாக்கி யவரும், தேயிலை தோட்டங்கள் மற்றும் உதகை படகு இல்லத்தை உரு வாக்கிய ஜான் சலீவனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இதன்பின் ஆஸ்தி ரேலிய சட்டமன்ற உறுப்பினரான ஜெகதீஷ்கிருஷ்ணனின் சொந்த வீட்டிற்கு சென்று, பெற்றோர் களிடம் உரையாடினர். அப்போது நீலகிரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங் கள் அவர்களுக்கு பரிசாக வழங்கப் பட்டது.