கோவை, செப்.14- காரமடை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை, ஆசிரியர் காலனியில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது. மேலும், இப்பகுதி கோவை - மேட்டுப் பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே, அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் அப்பகுதியில் ஏடிஎம் இயந்திரம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனி யார் வங்கி கிளை அப்பகுதியில் ஏடிஎம் மையத்தை அமைத்தது. பொதுமக்கள் அதிகளவில் அந்த ஏடிஎம் மையத் தை பயன்படுத்தி வந்த நிலையில், புதனன்று அதிகாலை அந்த ஏடிஎம் மையத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார். இதனால் இயந்திரத்தில் பொருத் தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். அலாரம் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதன்பின் தகவலறிந்த வங்கி மேலாளர் இதுகுறித்து கார மடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கார மடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.