districts

img

13 கடைகளில் கொள்ளை முயற்சி

13 கடைகளில் கொள்ளை முயற்சி சேலம், ஜன.3- சேலம் மாநகரில் ஒரே நாளில் 13 கடைகளில் கொள்ளை முயற்சி நடை பெற்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், சூர மங்கலம் அருகே உள்ள புது ரோட்டில் வணிக வளாகங்க ளில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின்  ஷட்டர்களில் பிரத்தியோக பூட்டு போடப்பட்ட நிலையில், வெளிப்பக்கமாக ஒரே ஒரு பூட்டு தொங்க விடுவதை வியா பாரிகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வியாழனன்று இரவு வெளிப்புற பூட்டை உடைக்க முயற் சித்த கொள்ளையன், கதவை திறக்க முடியாததால் 12 கடை களை சேதப்படுத்தி சென்றுள்ளான். தொடர்ந்து பழைய சூர மங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள மருந்து  கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன்  அங்கிருந்த 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியுள்ளது. இதையடுத்து வெள்ளியன்று காலை யில் கடைகளில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பது குறித்து  வியாபாரிகள் சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.