கோவை, ஜன.3- மதுக்கரை அருகே மலை யடிவார பகுதியில், சிறுத்தை தாக்கி பிறந்து சில தினங்களே ஆன குட்டியானை உயிரிழந் துள்ளது. கோவை மாவட்டம், மதுக் கரை வனச்சரகத்திற்கு உட் பட்ட பகுதியில் காயமடைந்த நிலையில் ஆண் குட்டியானை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்து றையினர், மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி புதனன்று யானை உயரிழந்தது. இதையடுத்து, நடத்தப் பட்ட பிரேத பரிசோதனையில், சிறுத்தை தாக்கி யானை உயிரிழந்தது தெரியவந் தது. தொடர்ந்து, இறந்த யானை வனப்பகு தியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.