districts

img

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 16- சிபிஎம் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்து தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தையும், அதன் ஊழியர்களையும் தாக்கியது. இந்த அராஜக நடவடிக் கையை கண்டித்தும், குற்றவாளிகளை கண்டறிந்து வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகாக்குழு சார்பில் ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.சதீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தாலுகாச் செயலாளர் என்.கனகராஜ், நிர்வாகிகள் ராஜேந்திரன், பி.பொன்னுச்சாமி, ஆர்.வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.