districts

img

சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர் தோழர் லெனின் சுந்தர்

சென்னை, ஆக. 11- இறுதி மூச்சு வரை ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர் தோழர் லெனின் சுந்தர் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக்  குழு உறுப்பினர், சிஐடியு மாவட்ட செயலாளர் சு.லெனின் சுந்தர்  படத் திறப்பு மற்றும் நினை வேந்தல் நிகழ்ச்சி பகுதிக்குழு உறுப்பினர் க.பிரபாகரன் தலைமையில் அம்பத்தூரில்  சனிக்கிழமை ஆக.10 நடைபெற்றது.  கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் தோழர் லெனின் சுந்தர் படத்தை திறந்து வைத்து பேசுகையில், தோழர் லெனின் சுந்தர், கல்லூரி படிப்பை நிறைவு செய்தவு டன் தன்னை இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தில்இணைத்துக் கொண்டு, தான் குடி யிருக்கும் பகுதி மக்க ளின் பிரச்சனைகளுக்காக போராடினார். பின்னர் மார்க்சிய தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட தோடு  மட்டுமல்லாமல், தனது பெயருக்கு முன்னாள் லெனின் பெயரை யும் இணைத்துக் கொண்டார்.  பின்னர் தொடர்ந்து மக்களின், தொழி லாளர்களின் உரிமைகளுக் காக போராட வேண்டும் என்று கருதிய அவர் நிரந்தர பணியை விட்டு விட்டு கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். கட்சி யின் அம்பத்தூர் பகுதி செய லாளராக 9 ஆண்டு கள் செயல்பட்ட அவர்  சிஐ டியு அம்பத்தூர் பகுதி தலை வராக, மாவட்டச் செய லாளராக செயல்பட்ட துடிப்பு மிக்க தோழர் லெனின் சுந்தர் திகழ்ந்தார். மிகுந்த ஈடு பாட்டுடன் சமூக பணிகளை, மக்கள் பிரச்சனைகளை மேற்கொண்டவர்.  தனது இறுதி மூச்சு வரை ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். கொள்கை பிடிப்புடன் நின்று களத்தில் போராடியவர். அவரது பணிக்கு துணை நின்ற, அவரது உடலை தானமாக வழங்க முன்வந்த அவரது குடும்பத்தினருக்கு கட்சி யின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு  கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.  மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் பேசுகை யில், ஆங்கில வார இதழ்கள், நாளிதழ்களில் வரக்கூடிய கட்டுரைகளை படித்து அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வார். அவர் ஏராளமான புத்தகங்களை படிப்பதுடன், இளம் தோழர்களுக்கு புத்தகங் களை கொடுத்து வாசிக்க செய்வார்.  எளிமையாக அனைவரிடமும் பழக்கக் கூடியவர். அம்பத்தூர் பகுதி யில் ஏராளமான போராட் டங்களை முன்னின்று நடத்தியவர் என்று கூறி னார்.  இதில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.வேதாச்சாலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி,  மதிமுக தெற்கு பகுதி செயலாளர் எம்.தாமோதரன்,  சௌ.சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), மனித நேய மக்கள் கட்சி மாண வர் அணி மாநில பொரு ளாளர் அப்துல் அஜீஸ், சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எல்.பி.சர வண தமிழன், மா.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பி னர் சி.சுந்தரராஜ், கே. ரவிச்சந்திரன் (மின் ஊழி யர் மத்திய அமைப்பு), சு.பால்சாமி (சிஐடியு), ஜி. மூர்த்தி (ஆட்டோ சங்கம்), பி.மாரியப்பன் (ஏஐடியூசி), இ.பாக்கியம் (தமுஎகச), வழக்கறிஞர் எஸ்.ஜான்சி உள்ளிட்டோரும் பேசினர்.