districts

img

பிஏபி தொகுப்பில் இருந்து உப்பாறு அணைக்கு 7 நாட்கள் உயிர்த்தண்ணீர் திறந்து விட கோரிக்கை

திருப்பூர், அக்.21- பிஏபி தொகுப்பில் இருந்து உப் பாறு அணைக்கு 7 நாட்களுக்கு தண் ணீர் திறந்து விடுமாறு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற மக் கள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயி கள் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் ஆட்சியரகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் வாராந்திர குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில்,  வடக்கு அவிநாசிபாளையம் ஊராட் சிமன்றம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, வடக்கு அவிநாசிபாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை உடனடியாக அகற்ற வேண்டும். ஊராட்சி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள் லைன்க ளையும், மின்மாற்றியையும் அகற்றி நீர்நிலை குட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட் டுள்ள மனுவில், கடந்த மாத விவசா யிகள் குறைத்து தீர்வு கூட்டத்தில் உப் பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த  கோரிக்கையை ஏற்று கடந்த அக்.19  முதல் 5 நாட்கள் தண்ணீர் திறக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 நாட்கள் தண்ணீர் திறப்பு மூலம் உப்பாறு ஓடையில் உள்ள 18 தடுப்பணைகள் மட்டுமே நிரம்பும். எனவே பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மேலும், 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து உப்பாறு அணையை நிரப்பி உயிர்த்தண்ணீர் கொடுத்து, உப்பாறு விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கக் கேட்டுக் கொண்டனர். மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையத்தில் வசித்து வரும்  சின்ன வெள்ளைச்சி என்பவர், பட்டிய லின வகுப்பை சார்ந்த கூலி வேலை செய்து வரும் தனக்கு, சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ இல்லை. எனவே அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். திருப்பூர் மாவட்டம் முழுவதும்  மிகப்பெரிய விளம்பர பலகைகளை  அகற்ற வேண்டும் என அண்ணா துரை என்பவர் மனு அளித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் ஜெயராமன், திட்ட இயக்கு நர் (மகளிர்த்திட்டம்) சாம்சாந்தகு மார் உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.