districts

img

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அவதிக்குள்ளான அருந்ததிய மக்கள்

இளம்பிள்ளை, அக்.10- மகுடஞ்சாவடி ஒன்றி யம், தப்பகுட்டை ஊராட்சி, சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் அருந்ததிய மக் கள் அதிகம் வசிக்கும் குடியி ருப்புக்குள் மழைநீர் சூழ்ந்த தால் அருந்ததிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட அருந்த தியர் மக்கள் குடியிருப்புகள் உள்ள  இப்பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக பெய்து வரும் மழையால் இரவு நேரங்களில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று இரவு பெய்த கனமழை யால் பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இப்பகுதியில் இடுகாடு பகுதியில் இருந்து மழை நீர் செல்வதற்கு முறையான கால்வாய் இல்லாததால் சாலைகளிலும் வீடு களிலும் தண்ணீர் தேங்கி நிற்கின் றன. இப்பகுதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து வீடுகளில் மழைநீர் தேங்காத அள விற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;