திருப்பூர், டிச.3- திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி திருப்பூர் மாவட் டத்தில் 29 மையங்களில் கலை, இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து ஆண்டுதோறும் திருப்பூர் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றனர். 21ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா வரும் 2025 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவை மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் ஆண் டுதோறும் கலை இலக்கியத் திற னாய்வுப் போட்டிகள் நடத்தப்படுகி றது. 21ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட் டத்தில் பள்ளிக்கல்வி துறை ஒப்புத லுடன் 29 மையங்களில் கலை, இலக் கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத் தப்படுகிறது. தலைப்புகள்: 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக் கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவி யப் போட்டியில் எனக்கு பிடித்த வாக னம், பூவும் செடியும், செல்லப்பி ராணி ஆகிய தலைப்புகள். 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிக ளுக்கு ஒற்றுமையே பலம், புத்தம் புது காலை, வயலும் உழவும் ஆகிய தலைப்புகளும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மரம் செய்ய விரும்பு, நிலவிற்குப் போகலாமா? உள்ளிட்டத் தலைப்பு களில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம். அதேபோல் கட்டுரை போட்டிக்கு 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்க ளுக்கு நான் வாசித்த முதல் புத்தகம், நெகிழி இல்லா உலகம், இணையம் பேசுகிறது, கற்க கசடற எனும் தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு, வரலாற்றில் ஒரு நாள், இந் திய நாகரிகங்கள், சொல்லின் வலிமை, அமைதியை நேசி உள் ளிட்ட தலைப்புகள் கொடுக்கப்பட் டுள்ளன. இதேபோல் கவிதை போட்டிக்கு ரிய தலைப்புகள், போட்டி நடை பெறும் நாளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள்: திருப்பூர் வடக்கு மையத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நி லைப்பள்ளி, புது ராமகிருஷ்ண புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நெசவாளர் காலனி மாந கராட்சி உயர்நிலைப்பள்ளி, வாவி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, மாஸ்கோ நகர் அரசு உயர்நிலைப் பள்ளி, 15வேலம்பாளையம் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி, பெருமாநல் லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நகர் அரசு உயர்நி லைப்பள்ளி, திருப்பூர் தெற்கு மையத்தில் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நொய்யல் வீதி அரசு உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, மங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி, நல்லூர் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி, கே.செட்டி பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் அரசு உயர்நி லைப்பள்ளி என 16 பள்ளிகளில் நடை பெறும். இது தவிர, அவிநாசி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, குன்னத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பொங்கலூர் பி.வி. கே.என்.மேல்நிலைப்பள்ளி, தாராபு ரம் என்.சி.பி. மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 பள்ளிகள் என மொத்தம் 29 மையங் களில் இந்தப் போட்டிகள் நடை பெறுகின்றன. இதில், மாணவ, மாணவிகளை அதிகளவு பங்கு பெறச் செய்து கலை இலக்கிய திறனை ஊக்குவிக்க புத்த கத் திருவிழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.500, இரண்டாம் பரிசாக ரூ.300 மூன்றாம் பரிசாக ரூ.200 என ரொக்கப்பரிசும், நினைவு பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் பங்கெ டுக்கும் அனைத்து மாணாக்கர்களுக் கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்ப டும் என புத்தகத் திருவிழா மாணவர் திறனாய்வுப் போட்டி ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்துள்ளனர்.