பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யக் குழு நியமிப்பு
உதகை, பிப்.10- நீலகிரியில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி மலை வேடர் இன மக்கள் தொடர் போரட்டங்கள் நடத்தியதை அடுத்து, இது தொடர் பாக ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை திங்களன்று அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட் டனேரி, பன்னிமரா ஆகிய கிராமங்க ளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை வேடர் இன மக்கள் வாழ்ந்து வருகின் றனர். இந்த மக்களுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வரை பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்களின் குழந் தைகள் கல்வி கற்றலில், அரசு பணிக ளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த மக்கள் பழங்குடி யினர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக தங்கள் கிராமத்தில் உள்ள 100 க்கும் மேற் பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் ஊரில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் முறை யான பதில் கிடைக்கவில்லை. இதை யடுத்து, கல்லட்டி மலைப்பாதையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள் பட நூற்றுக்கணக்கான மலை வேடர் இன மக்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகம், மாநில அர சின் கவனத்திற்கு கொண்டு சென் றது. 3 பேர் அடங்கிய குழு: இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை திங்களன்று நியமித்து தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், நீலகிரி மாவட்டம் உல் லத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தட்ட னேரி, பன்னிமாரா ஆகிய கிராமங்க ளில் வசிக்கும் மக்களுக்கு மலைவே டன் பழங்குடியின சான்றிதழ் குறித்து கள ஆய்வு செய்து, பழங்குடியினர் நல இயக்குனருக்கு அறிக்கை அளிக் கும் வகையில், மூத்த மானுடவிய லாளர்கள் தமிழொலி, காளிதாஸ் மற் றும் மானுடவியலாளர் அமுத வள்ளு வன் ஆகியோர் அடங்கிய 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விற்கு பழங்குடியினர் நல இயக்கு னர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சி யர் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவியிடம் வழிப்பறி
சேலம், பிப்.10- நங்கவள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவியின் வாயில் துணிவைத்து கொலுசை வழிப்பறி செய்த நபர்களை போலீ சார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள மூலக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் அருவங் காடு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் - சித்ரா தம்பதியின் மகள் மோகனப்பிரியா 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில், மோகனப்பிரியா திங்களன்று பள்ளிக்கு நடந்து வரும் போது, மாந்தோப்பிருந்து முகமூடி அணிந்து கொண்டு வந்த 2 பேர், மாணவியின் வாயில் துணி வைத்து அடைத்து கொலுசை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர் அப்போது, எதிரே இருசக்கர வாகனம் வந்ததால், கொலுசை கீழ போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் நங்கவள்ளி போலீ சார், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடை யாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
கோவை, பிப்.10- கோவை மாவட்டம், காட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி யாற்றுபவர் கார்த்திகேய பாண்டி. இவர் குடியரசு தின ஒட்டி காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்திய போது மூன்று பேர் இவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை ஆய்வா ளர் தவ்லா நிஷா விசாரணை மேற்கொண்டு ஆல்வின், முகமத் ஷாலி ஆகியோரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்றனர். இதில், ஆல் வின், முகமத் ஷாலி ஆகி யோர் கால் முறிந்த நிலை யில் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டு உள்ளனர். இவ் வழக்கில் தலைமுறைவான கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த விஜித் என்பவரை ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி பங்கேற்ற விழாவை புறக்கணித்த முன்னாள் அமைச்சர்
கோவை, பிப்.10- அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா என்னும் நிகழ்ச்சி அன்னூர் அருகே நடைபெற்றது. இதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்ததால், அதிமுகவினர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர், கஞ்சப்பள்ளி பிரிவு பகு தியில் “அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய முன் னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஒருங்கிணைப்பு குழு செய்திருந்தனர். இவ்விழாவில் பேசிய முன்னாள் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி, இது எனக்கு கிடைத்த பாராட்டு அல்ல விவசாயிகளுக்கு கிடைத்த பாராட்டாக கருதுகிறேன். நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன். ஆனால் இன்று தான் நான் மன நிறைவுடன் பேசுகிறேன் என பேசி கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் அமர்ந்திருந்த வர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலி சேர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஒரு சிலரை பார்த்துக் கொண்டே அவர் பேசினார். விழாவை புறக்கணித்த முன்னாள் அமைச்சர்: இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் இவ்விழாவை புறக்கணித்தது பரபரப்பை ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஞாயிறன்று கோபிசெட்டிபாளையத் தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்திக்கடவு - அவி நாசி திட்ட கூட்டமைப்பினர் முன்னாள் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த போவதாகவும், பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அழைப்பிதழ் வழங்க மூன்று நாட்களுக்கு முன் வந்தி ருந்தனர். அப்போது அவர்களிடம் எங்களை உருவாக்கி யவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அவர்களின் படங்கள் இல் லாமல் பல்வேறு இடங்களில் பேனர்கள் உள்ளன என கூறிய தாகவும், இத்திட்டத்திற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலில் நிதி ஒதுக்கி, அன்றைய அமைச்சர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கியவர் ஜெய லலிதா. எனவே பணிகள் துவங்க அடித்தளமாக இருந்த அதி முகவின் தலைவர்களின் படங்கள் இல்லாமல் பாராட்டு விழா நடைபெறுகிறது. எனவே இவ்விழாவிற்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ரயில்வே மேம்பாலம் கட்ட வலியுறுத்தி மார்ச் 7 இல் ஆர்ப்பாட்டம்
கோவை, பிப்.10- ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட வலியுறுத்தி மார்ச் 7ஆம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், கடுவு எண் மூன்றில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அர சாணை டி/200 போடப்பட்டு 26.70 கோடி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேம்பாலம் கட்டுவதற்கு அனைத்து பணி களும் துவங்கி, நிலம் எடுப்பு மற்றும் சர்வே முடிந்த சூழலில், மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணை 2021 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும், சாலை மறி யல், உண்ணாவிரதம், கருப்புக்கொடி கட்டுதல் என தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 56 ஆவது வார்டு, சிவலிங்கபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலை மையில் அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த பிப்.8 ஆம் தேதி நடை பெற்றது. இதில், மார்ச் 7ஆம் தேதி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப் போர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிபிஎம் கிளை செயலா ளர்கள் சுப்ரமணி, ஐ.பாண்டியன், மணிகண்டன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிறம் மாறி காணப்படும் காவிரி ஆற்று நீர்: மக்கள் அதிர்ச்சி!
- எம்.பிரபாகரன் - நாமக்கல், பிப்.10- குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி நீர், பச்சை நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர். நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட் டங்களை இணைக்கும் பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. சுற்றுவட் டார பகுதிகளின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக காவிரி ஆற்று நீர் விளங்கி வருகிறது. பெரும் வர வேற்பை பெற்றுள்ள சமயசங்கிலி கிராமத்தின் பொங்கல் கரும்புகள் சாகுபடி, இந்த காவிரி ஆற்றின் நீரை நம்பிதான் உள்ளது. மேலும், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, களியனூர் கிராமத்திலிருந்து திருங் செங்கோடு வரை ராட்சச குடிநீர் குழாய் மூலமாக, ஆற்று நீர் சுத்தி கரிப்பு செய்யப்பட்டு, திருச்செங் கோடு நகராட்சி பகுதிகளுக்கு விநி யோகம் செய்யப்படுகிறது. குடிநீர் சேவையின் தவிர்க்க முடியாத அங் கமாக இந்த காவிரி ஆறு உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து அதிக ளவு நீர் திறக்கப்படும் போதெல் லாம் காவிரி கரையோரம் உள்ள வீடுகளில் காவிரி ஆற்று நீர் புகுந்து, அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படு வது வழக்கம். சமயசங்கிலி, ஓடப் பள்ளி ஆகிய இரண்டு பகுதிகளி லும் நீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சா ரம் எடுக்கப்படுகிறது. இதன் கார ணமாக எப்போது பார்த்தாலும் கடல் போல் காவிரி ஆறு காட்சிய ளிக்கும். பள்ளிபாளையம் குமாரபாளை யம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக ளவு விசைத்தறி கூடங்கள் செயல் பட்டு வருவதால், விசைத்தறி ஜவுளி நூல்களுக்கு சாயமேற்றும் வகையில் சாயப்பட்டறைகள் அதி களவு செயல்பட்டு வருகிறது. சாயக் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படா மல் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கப்படுவதாக அவ்வப்போது புகார் எழுந்து வரும் நிலையில், இந்த நீரை பருகும் பொதுமக்க ளுக்கு கண் எரிச்சல், தோல் நோய், உடல் உபாதைகள் உள்ளிட்ட பாதிப் புகள் ஏற்பட்டு வருகிறது. இத னால் காவிரி ஆற்று நீரை பயன் படுத்துவதை தவிர்த்து, விலைக்கு குடிநீரை வாங்கும் நிலை ஏற்பட் டுள்ளது. இப்படி கடல் போல் காட்சி அளிக்கும் நிலையில் காவிரி ஆற்று நீர் இருந்தபோதிலும் பல்வேறு கார ணிகளால் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், காவிரி ஆற்று நீர் கடந்த சில தினங்களாக பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால் காவிரி ஆற்று நீரை பயன்படுத்தும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவிரி ஆற்றில் ரசாயன திரவம் ஏதும் கலந்துள்ளதா!? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள் ளதா? என நீர்வளத்துறை அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ள வேண் டும் என்பது பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கூறுகையில், கோடைக்காலம் நெருங்கி வருவதால், நீர் தட்டுப் பாடு ஏற்படும். அப்போது தவிர்க்க முடியாத சூழலில் இந்த காவிரி ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற் படும். ஆனால், தற்போது இந்த ஆறு முன்பை காட்டிலும் படுமோச மான நிலையில் உள்ளது. பச்சை நிறத்தில் காணப்படும் காவிரி ஆற்று நீரை காணும் போதே மன திற்குள் ஒருவித அச்சம் ஏற்படுகி றது. இங்கு மட்டுமல்லாமல் மாநி லம் முழுவதும் அரசு அதிகாரிகள் இதுபோன்ற பாதிப்புகள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து முன் னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு, காவிரி ஆற்று நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பள்ளிபாளையம் போன்ற பகுதிக ளில், பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குவது என்பது இய லாத காரியம். மேலும், கோடைக் காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலையையும் உருவாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.