ஈரோடு, ஜுன் 24- மலைவாழ் மக்களுக்கு “ஓ.சி” என சான்றிதழ் வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மலைப்பகுதியான பர்கூர், ஈரெட்டி, தேவர்மலை, மின்தாங்கி, கல்வாரை, எப்பத்தாம்பாளையம், எண்ணமங்கலம், மலையனுார் உட்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறி உள்ளதா வது, பர்கூர் மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக மலையாளி இனத் தை சேர்ந்தவர்கள் வசித்து வருகி றோம். இச்சமுதாயத்தை சேர்ந்த வர்கள் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்ற முறையில் எஸ்.டி., சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் எங்களது உறவினர்கள் வசிக்கின் றனர். அம்மாவட்ட நிர்வாகம், அவர் களுக்கு எஸ்.டி., சான்றிதழ் வழங்கி உள்ளனர். ஆனால், எங்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கா மல், ‘ஓ.சி’ என சான்றிதழ் வழங்கு கின்றனர். இதன் மூலம் 10ஆம் வகுப்பு கூட எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. 10ஆம் வகுப்பில் எஸ்.டி., சான்று வழங்கா விட்டால், அதன் பின் இணைக்க இயலாது. இதனால் உயர் கல்வி, அரசின் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள், வேலைவாய்ப்பு ஆகியவை பெற முடியவில்லை. இதுபற்றி, பல மாதமாக மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது, சாதிச்சான்றிதழ் இன்றி பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர். எனவே ஆட்சியர் உரிய தலையீட்டை செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.