சேலம், ஜூலை 22- சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர் வில் சாதி ரீதியாக கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியரை வன்கொடுமை தடுப்பு சட்டத் தில் கைது செய்ய வலியுறுத்தி சேலம் பெரி யார் பல்கலை கழகம் முன்பு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில், “தமிழகத்தில் தாழ்ந்த சாதி எது?” என்ற கேள்வி இடம்பெற்றிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை உருவாக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக பல்கலைக் கழகம் நுழைவாயில் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கூறுகையில், சேலம், நாமக் கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள் ளடக்கி சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற மாணவர்களுக் கான தேர்வில், சாதிரீதியாக கேள்வி கேட் டது பெரியார் பெயரை தாங்கி நிற்கும் பல் கலைக்கழகத்திற்கு அவமரியாதை ஏற்படுத் துவதாகும். சாதிய ரீதியான வினாவை தயா ரித்த போராசிரியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வினாத்தாளை முறையாக பரிசீ லிக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்த பல் கலைக்கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் வீ.இளங்கோ, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிர வீன்குமார், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், ஓமலூர் தாலுகா செயலாளர் என். ஈஸ்வரன், சேலம் தாலுகா செயலாளர் கே. எஸ்.பழனிசாமி, வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் வி.வெங்கடேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட துனைத் தலைவர் கே.ராஜாத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.