districts

img

தாராபுரத்தில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

தாராபுரம், மார்ச் 4- திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாலிபர்  சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக் கம் சனியன்று நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற  தமிழ்நாட்டை உருவாக்க கோரி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்  ஒருபகுதியாக தாராபுரத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர்  என்.கனகராஜ் முன்னிலையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பகத்சிங் சிலம்பாட்ட குழுவின ரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காம ராஜபுரம், நாடார் தெரு உள்ளிட்ட நகரபகுதிகளில் கையெ ழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன், மாவட்ட பொருளாளர் பாலமுரளி, நிர்வாகிகள்  பால சுப்பிரமணியம், பொன்னுசாமி, மேகவர்ணன், பாரதி, மாரி முத்து, சத்தீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.