districts

img

போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

தாராபுரம், ஆக.10- தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பட் டிணம் ஊராட்சியில் அலங்கியம் காவல் துறையினர் சார்பில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.  இப்பேரணியை தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண் டன் தொடங்கி வைத்தார். பேரணி தாராபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய கடைவீதி வழி யாக தளவாய்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்து  மீண்டும் பள்ளி வளாகம் சென்று முடிவடைந்தது. இப்பேரணியில் பள்ளி மாணவ மாணவியர்கள் கஞ்சா, பான்பராக் மற்றும் புகையிலை போதைப்பொருளை பயன்ப டுத்த மாட்டோம். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும்  என கையில் பதாகைகளை ஏந்தியவாறு 200 க்கும் மேற்பட் டோர் சென்றனர். அலங்கியம் காவல் துணை ஆய்வாளர் சுந்தரராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் குப்புசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.