districts

img

கூடலூர் விவசாயிகளின் கைவச நிலத்திற்கு பட்டா - மின் வசதி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம்

உதகை, மார்ச் 8- கூடலூர் உட்பட நீலகிரி மாவட்டத்திலுள்ள விவசாயிக ளின் கைவச நிலத்திற்கு பட்டா  மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்ற தமிழக முதல் வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்ட பத்தில் ஞாயிறன்று தமிழக விவ சாயிகள் சங்க கோரிக்கை மாநாடு சங்கத்தின் மாவட்ட தலைவர் என். வாசு தலைமையில் நடைபெற்றது இதில், மாநில இணைச் செயலா ளர் டி.ரவீந்திரன், மாவட்ட செய லாளர் ஏ.யோகண்ணன், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மா நாட்டில், சிறு விவசாயிகளின் கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். எம்பவேர்ட் கமிட்டி யின் கட்டுப்பாட்டிலிருந்து, கூட லூர் ஜன்மம் நிலம் மற்றும் பட்டா நிலம் முற்றிலும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தில் இருந்து, 5 ஏக்கர் வரையிலான நிலம் முற்றிலும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்ப டையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி மேற் கண்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார் பில் மார்ச் 13 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 9 மையங்க ளில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட் டத்தில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பெருந்திரளாக பங்கேற்க செய்வது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. நிறை வாக, டி.கே.பிலிப் நன்றி கூறி னார்.