திருப்பூர், பிப். 20 - தமிழகத்திற்குத் தர வேண்டிய கல்வி நிதிப் பங்களிப்புத் தொகையை ஆணவத்துடன் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோபா வேச ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக வியாழக்கிழமை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலி பர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் எஸ்.விவேக் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்டப் பொருளாளர் கே.பாலமுரளி, வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.சந் தோஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பிர வீன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இந்தியர்களை கொத்தடிமை போல கை, கால்களில் விலங்கிட்டு கொண்டு வந்த அமெரிக்க அரசைக் கண்டிக்க மறுத்து ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் கூனிக்குறுகி நடந்து கொண்ட மோடியைக் கண்டித்தும், மக் கள் விரோத ஒன்றிய அரசின் பட் ஜெட்டை எதிர்த்தும், தமிழகத்தை வஞ் சிப்பதைக் கண்டித்தும் உரையாற்றி னர். இதில் மாணவர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் கே.நிருபன் சக்கர வர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வீ.பாலசுப்பிரம ணியம், ராம்கி, முருகேஷ் உள்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக தெற்கு ஒன்றியச் செய லாளர் க.சிந்தன் நன்றி கூறினார்.