districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், செப்.5- பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தினர் மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளியன்று ஈடு பட்டனர். அதிகாரிகள் உறுதிய ளித்த பின் போராட்டத்தை தற்கா லிகமாக கைவிட்டு கலைந்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண் டும். பெரும்பாலான மாவட்டங்க ளில் பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டன. ஆனால், குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் தற்போது வரை பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) பலமுறை மாவட்ட திட்ட அலுவலரிடம் கடி தம் அளித்தும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தற் போது வரையும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்ப தால், இதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு. திருப்பூர் மாவட்டத் தலைவர் டி.சித்ரா தலைமையில், அங்கன் வாடி ஊழியர்கள் வியாழனன்று மாலை காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வெள் ளியன்று வரை காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் கே.சித்ரா, சிஐடியு மாநில நிர்வாகி ஆர்.அனிதா, சிஐடியு இணைச் செயலாளர் கே.எல்லம்மாள் உள் ளிட்ட ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வெள்ளி யன்று மாலை, மாவட்ட நிர்வா கம் பேச்சுவார்த்தை நடத்தி, பதவி உயர்வு விடுபட்டுள்ள மாவட்டங்க ளுக்கு திங்கட்கிழமை அரசாணை வழங்கப்படும் என உறுதி அளித் ததை தொடர்ந்து, வெள்ளியன்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.