districts

img

திருப்பூர் என்ஆர்கே.புரம் தோழர் ஏ.கே.ஜி. நிலையத்தில் நன்னம்பிக்கை மையமாக திகழும் மாலை நேர வகுப்பு

 இன்று நிலவிவரும் பொருளாதாரச் சூழலில் மக்கள் பலர் அன்றாட குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 8 மணி நேரத் திற்கு மேல் 10, 12 மணி நேரம் என்று அதிக  நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. தங் கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று பெற்றோர்கள் பலர்  தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட குறைத்துக் கொண்டு தனியார் டியூசன்க ளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் அங்கோ,  கல்வியைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக  விற்கின்றனர்.  இத்தகைய சவாலான சூழ்நிலையில், திருப்பூர் என்.ஆர்.கே.புரம் பகுதியில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவல கமான தோழர் ஏகேஜி நிலையத்தில் மாலை  நேர கல்வி வகுப்பு எவ்வித கட்டணமும் இன்றி  சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த மாலை நேர வகுப்பு குழந்தைக ளுக்கு கல்வி அளிப்பது மட்டுமின்றி, அவர்க ளது குடும்ப சூழல் அறிந்து, தக்க முறையில்  வழிகாட்டி, உதவி வரும் ஒரு நன்னம்பிக்கை  மையமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மாலை நேர வகுப்பில் குழந்தைகள் பயில்வ தால், பெற்றோர்கள் பலர் நிதிச்சுமையில் இருந்து தப்புகின்றனர். என்.ஆர்.கே.புரத்தில்  கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாலை நேரப்  பள்ளி செயல்பட்டு வருகிறது. என்.ஆர்.கே.பு ரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயி லும் ஏறத்தாழ 40 குழந்தைகள் இங்கு படிக் கின்றனர்.  இந்த மாலை நேர வகுப்பு சம்பிரதாயத் துக்கு நடத்தப்படவில்லை. மிகுந்த பொறுப்புணர்வுடனும், ஒவ்வொருவரின் முன்னேற்றம் பற்றிய அக்கறையுடனும், குழந்தைகள் கனிவோடு கண்காணிக்கப் பட்டு, கவனமாக அவர்களது கல்வி மேம்ப டுத்தப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கை, கொரோனா காலகட்டத்திற்குப் பின்னர் மாணவர்களால் தங்களுடைய பாடத் தில் உள்ள வாக்கியங்களை சரியாக படிக்க  இயலவில்லை எனக் கூறுகிறது. பள்ளிகளின்  ஆன்லைன் கல்வி தற்போது மாணவர்களின்  மதிப்பெண்களை நேரடியாக பாதிக்கிறது. இந்த மாலை நேரப் பள்ளியில் மாணவர்க ளுக்கு பிரத்தியேகமாக பயில அவர்களுக் கென்று கால அட்டவணை மற்றும் தனித்தனி யாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்க ளது தேர்வுகளின் முன்னேற்ற அறிக்கை பதிவு  செய்யப்படுகிறது. தொடக்கத்தில் எட்டாம் வகுப்பு வரை மட் டுமே மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டது. பெற்றோரின் வேண் டுதல் காரணமாக ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களும் இங்கே சேர்க்கப்பட்டனர். பத் தாம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வு  எழுத வேண்டி இருப்பதால், அவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக, இந்த மாலை நேர  வகுப்பின் பொறுப்பாளராக செயல்படும்  கட்சி கிளைச் செயலாளர் விழிப்பு எம்.நடரா ஜன், ஒன்பது, பத்தாம் வகுப்பு, தமிழ் கணிதம்  அறிவியல் உள்ளிட்ட புத்தகங்களை வாங்கி,  அவரே முழுமையாகப் படித்துக் குறிப்புகள்  எடுத்து மாணவர்களுக்கு கற்பிக்கத் தயார் ஆனார். ஒவ்வொரு மாதாந்திர, காலாண்டு, அரை யாண்டு தேர்வுகளின் வினாத் தாள்களைப் பெற்று அதில் இடம் பெறும் முக்கிய கேள்வி களையும், அதற்குரிய பதில்களையும் மாண வர்களுக்கு கற்பிக்கின்றனர். இந்த மாலை நேரப் பள்ளியில் ஆசிரியர்க ளும், கல்லூரி பயிலும் மாணவர்கள் என்ப தால் குழந்தைகளின் உளவியல் அறிந்து இணக்கமாக நடந்து கொள்கின்றனர். மேலும்  குழந்தைகளிடம் அன்புடன் அணுகி அவர்க ளுக்கு ஏற்றவாறு பாடங்களைப் பயிற்றுவிற் கின்றனர். இந்த பயிற்றுவிப்பு முறையினால் மாண வர்களின் படிப்பு முன்னேற்றம், மிகத் தெளி வாக, வெளிப்படையாக அறிய முடிகிறது.  உதாரணத்திற்கு பள்ளியில் நடைபெற்ற தேர் வுகளில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கூ டப் பெறாமல், தொடர்ந்து தோல்வியடைந்து வந்த சில மாணவர்கள், இங்கே வந்து படித்து 70, 80 சதவிகித மதிப்பெண் எடுத்து தங்கள் முன்னேற்றத்தைக் காட்டினர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை யில் இருந்த பலர் இந்த மாலை நேரப் பள்ளி யில் படித்து தற்போது பட்டதாரிகளாகவும், அரசு மற்றும் தனியார் துறைகளிலும் வேலை  செய்து வருகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள மாணவர்க ளுக்கும் படிப்பு மற்றும் புத்தகத்தின் சுவை  அறிய வேண்டும் என்பதற்காக குழந்தைக ளுக்கான 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  இங்கே பயிலும் மாணவர்களின் பெற் றோர்கள் பலர் ஓவர்லாக், பேட்லாக் டெய்லர் களாகவும், தினக் கூலிகலாகவும், முறைசாரா  தொழிலாளர்களாகவும் உள்ளனர். அவர் களை தொழிலாளர் நல வாரியங்களில் இணைய உதவுவது மற்றும் மருத்துவ காப் பீடு பெற உதவுவது போன்ற பணிகளையும் இங்கே செய்து கொடுக்கின்றனர்.   கல்வி மட்டுமின்றி குழந்தைகளுக்கு வார  இறுதி நாட்களில் அவர்களுக்கான பொழுது போக்காக விளையாட்டு உபகரணங்கள் மற் றும் மாதம் ஒரு முறை குழந்தைகளுக்கான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. மாண வர்களும் பல்வேறு விளையாட்டு போட்டி கள், பேச்சுப் போட்டி, பறை இசை, சிலம்பம்  போன்றுவற்றில் அவர்களது தனித்திறமை களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மாலை நேர வகுப்பு இங்கு பயிலும்  மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவது டன், அவர்களது குடும்பத்தினருடனும் உறவை ஏற்படுத்தி, இன்றைய சமூக சிக்கல் களை எதிர்கொண்டு, வாழ்வில் முன்னேறு வதற்கு நன்னம்பிக்கை மையமாகவும் வழி காட்டி வருகிறது. - தனுஷ் ஈஸ்வர்