கோவை, டிச.30- இந்திய அரசியலமைப்புச் சட் டத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை ராஜி னாமா செய்யக்கோரி இடதுசாரி கட்சிகளின் சார்பில் திங்களன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், உக்கடம் பேருந்து நிலை யம் வள்ளியம்மை பேக்கரி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட இணைச் செயலாளர் ஜெ.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளா ளர் ஆறுமுகம், இந்திய கம்யூ னிஸ்ட் (எம்-எல்) லிபரேசன் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட் டம், சூரம்பட்டி நால்ரோட்டில் நடை பெற்ற இடதுசாரி கட்சிகள் ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஐ தெற்கு மாவட் டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகி துளசிமணி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் கார்த்திகேயன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.