திருப்பூர், ஜூன் 29- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிக ளில் அவ்வபோது மழை பெய்ததை யொட்டி அமராவதி அணையின் நீர் மட் டம் 60.99 அடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப் பகுதி யில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்க ளில் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர் வருகிறது. இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகி றது. மேலும், குடியிருப்புகளுக்கும் குடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், அணையிலிருந்து ஜூன் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 06 ஆம் தேதி வரை பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களுக்கு 80 நாள் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற முறையில் நீர் திறக்கபட்ட உள் ளது. அதன்படி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 24 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட் டது. இதனால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை தொடங்கியதை யொட்டி கடந்த 2 நாட்கள் பெய்த மழை யில், ஒரே நாளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து. அமராவதி அணையின் நீர்பி டிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற் பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நிலவ ரப்படி 52.96 அடியாக இருந்த அணை யின் நீர்மட்டம் சனியன்று காலை 60.99 அடியாக உயர்ந்தது. அதன்படி 3 நாளில் அணையின் நீர் இருப்பு உயர்ந்துள் ளது. அணைக்கு வினாடிக்கு 904 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள் ளது.