districts

img

தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிடுக

தருமபுரி, டிச.24- பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும், எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு செல்லும் விதமாக  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாட்டில் மாவட்ட வள்ர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனு திங்களன்று தருமபுரி மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி-யிடம் வழங்கப் பட்டது. அதில், ஆண்டு சராசரி மழைப்பொழிவு குறைவாக உள்ள  தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில், காவிரி உபரி நீரை நீரேற்றம் மூலம்  ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை  விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் மூலம் மொரப்பூர், கடத் தூர் ஒன்றியங்களில் உள்ள ஏரிக ளில் நிரப்ப வேண்டும், மாவட்டத் தின் வளர்ச்சிக்கு ஒன்றிய, மாநில  நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாய்  சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.  வட்டந்தோறும் உணவுப்பொருள் பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண் சார்பு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மொரப்பூர் - தருமபுரி ரயில்  பாதை திட்டத்தை அமலாக்க வேண் டும். ஏரியூர் ஒன்றியம், ஏமனூர்,  பாலக்கோடு ஒன்றியம், மல்லுப் பட்டி, வீராசனூர், ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அள்ளி, பிக் கன அள்ளி பகுதிகளில் புறம் போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வனத் துறையினர் நில வெளியேற்றம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண் டும். மேற்கண்ட அனுபவ நிலத்தில்  மா சாகுபடி செய்து வரும் விவசாயி களிடம் வரி வசூலிப்பதை கைவிட  வேண்டும். ஏரிமலை கோட்டூர்  மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவ தும் உள்ள மலை கிராமங்களில் சாலை போக்குவரத்து, மருத்துவ  வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப் பூர் பகுதிகளில் சேகோ ஆலைகள் அமைக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற் றுத்திறனாளிகளின் வசதிக்காக சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். இளம் வயது திருமணங்கள், பெண் கள், குழந்தைகள் மீதான வன் முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளரிளம் பெண் கள் கருத்தரிக்கும் நிலையைத் தடுக்க, பெண்களின் சமூக பொரு ளாதார மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அதில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.