கோவை, ஆக 1- ஆழியார் சோதனைச் சாவடியில் அனுமதியின்றி கட்டண வசூல் வேட்டை யில் வனத்துறையினர் ஈடுபடுவதா கவும், இதனை உடனடியாக தடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. கோவை மண்டல முதன்மை வனத் துறை அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா குழு உறுப்பினர்கள் கே.மகாலிங்கம், வி.பாலகுருசாமி ஆகியோர் அளித்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வால்பாறை, அட்டகட்டி ஊர்களுக்கு செல்லும் வழியில் வனத்துறை கட்டு பாட்டில் ஆழியார் செக்போஸ்ட் உள் ளது. கட்டண வசூல் சம்பந்தமாக எந்த அரசாணையும் இல்லாத போதும், வால்பாறை, அட்டகட்டி, உடுமலைப் பேட்டை வழியாக கேரளா மாநிலம் மறையூர், மூணார் செல்வதற்கான பய ணிகளிடமும் பணம் வசூல் செய்கி றார்கள். காரில் செல்பவர்களிடம் காரில் எத்தனை நபர்கள் இருந்தாலும் ஒவ் வொரு நபருக்கும் தலா ஐம்பது ரூபாய் வீதம் வசூல் செய்யபடுகிறது. வால்பாறை மூணார் செல்லும் பயணி கள் அனைவரும் சுற்றுலாவிற்கு, வனப் பகுதி அல்லது நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வர்களிடம் மட்டும் வசூல் செய்ய வேண்டும். தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் பணம் வசூல் செய்ய கூடாது. சொந்த வேலையாக ஊருக்குதான் செல்கி றோம் என்று சொன்னாலும் உறவுக் கார வீடுகளுக்கு செல்கிறோம் என சொன்னாலும் டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும் என கட்டாயப்ப டுத்தி வசூல் செய்து விடுகிறார்கள். நாங்கள் கட்சி மற்றும் சங்க வேலைக ளுக்கும் கூட்டங்களுக்கும் செல்கி றோம் என கூறினாலும் வசூல் தந்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் கேரளா சுங்க வசூல் செய்வ தில்லை. தமிழ்நாடு அரசாணையால் வசூல் செய்ய சொல்லி எந்த ஆணை யும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தாங்கள் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.