நாமக்கல், ஜன.3- கரும்பு கொள்முதலுக்கு விவ சாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘லஞ்சம் கேட்கவில்லை’ என குறிப் பிடப்பட்டு விவசாயிகளை மிரட்டி அதிகாரிகள் கையெழுத்து பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள சமயசங் கிலி கிராமத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு கள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தைப்பொங்கல் திருநாளை முன் னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப் பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடை மூலமாக வழங் குவதற்காக பொங்கல் கரும்பு களை கொள்முதல் செய்வதற் காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வியாழனன்று சமயசங்கிலி கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது, பொங்கல் கரும்பு களை கொள்முதல் செய்ய அதி காரிகள், லஞ்சம் அல்லது இலவச மாக கரும்புகளை தர வேண்டும் என நிர்பந்திப்பதாக விவசாயிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந் தது. இதுகுறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலை யில், அதிர்ச்சியடைந்த அதிகாரி கள் அவசர அவசரமாக மாலை 4 மணியளவில் சமயசங்கிலி கிராமத் திற்கு ரகசியமாக வருகை தந்தனர். அப்போது அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், ஊட கங்களில் செய்தி வந்தது போல கரும்பு கொள்முதலுக்கு எந்த அதி காரிகளும் லஞ்சம் கேட்கவில்லை. கரும்பு இலவசமாக கேட்கவில்லை என குறிப்பிடப்பட்டு பேப்பரில் கையெழுத்திட வேண்டும் என விவ சாயிகளை நிர்பந்தித்ததாக கூறப் படுகிறது. இதனையறிந்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் சென்ற பொழுது, அவசர அவசரமாக விவ சாயிகளிடம் கையெழுத்து பெற்று விட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றுவிட்டனர். கரும்பு விலை குறைப்பு இந்நிலையில், வெள்ளியன்று சமயசங்கலி ஊராட்சி மன்ற அலு வலகத்தில், சேலம் கூட்டுறவு சர்க் கரை ஆலை துறை மாவட்ட வரு வாய் அலுவலர் மல்லிகா, நாமக் கல் வேளாண்மை இயக்குநர் செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலை மையில், விவசாயிகளுடன் கரும்பு விலை நிர்ணயம் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையின் முடிவில், கரும்பு ஒன்றுக்கு அரசு சார்பில் 35 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டு இருந்தாலும், கரும்பு வெட்டு கூலி, ஆள் கூலி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 23 ரூபாய் மட்டுமே தர முடியும் என்று திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்ததால் விவ சாயிகள் ஏமாற்றத்துடன் சென்ற னர். ஏற்கனவே, கரும்பு கொள்முதல் செய்ய அதிகாரிகள் கமிஷன் மற் றும் இலவசமாக கரும்பு கேட்ப தால் நஷ்டம் ஏற்படுகிறது. தற் போது கரும்பிற்கான விலையும் குறைக்கப்பட்டுள்ளதால், தங்க ளது ஒரு வருட உழைப்பு வீணாகிப் போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எதிர்வரும் காலங் களில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யும்போது அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. விவசா யிகள் நலம் சார்ந்து செயல்பட வேண்டுமான விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.