districts

img

மருத்துவர்கள் பங்கேற்காத மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு

தருமபுரி, டிச.7- மருத்துவ முகாம்களில் மருத்து வர்கள் பங்கேற்பதை உறுதி படுத்துமாறு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  தருமபுரி கோட்டாட்சியர் அலுவ லகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமை  வகித்தார்.  கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அரசு உதவித் தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி, கடன் உதவி, வேலை வாய்ப்பு,  மூன்று சக்கர பெட்ரோல் வாகனம், அரசு வழங்கும் வீடு, இலவச மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கேட்டு மாற்றுத்திற னாளிகள் மனு அளித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து பேசுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். 75 சதவிகித குறைபாடு உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு  உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம்  வழங்குகிறது. இந்த உதவித்தொகை  பெற விண்ணபித்த மனுக்கள்  நிலுவையில் உள்ளது. இதில் தகுதி யுடையவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் 2 ஆவது மற்றும் 4 ஆவது வாரத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம் தருமபுரி மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவல கத்தில் நடைபெறுகிறது. இம் முகாமிற்கு நியூரோ மருத்துவர்கள் வருவதில்லை.

இதனால் அரசு  மருத்துவமனைக்கு செல்ல மாற்றுத் திறனாளிகள் அலைகழிக்கப்படு கின்றனர். எனவே மருத்துவ  முகாம்களில் மருத்துவர்கள் பங்கேற் பதை உறுதிபடுத்த வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சத விகித இட ஒதுக்கீட்டின் படி, அரசு  மற்றும் தனியார் வேலைவாய்ப்பு கள் வழங்கவேண்டும் என தெவித் தார். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ஜெயக்குமார் சம்பந் தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். இக்குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில், தருமபுரி வட்டாட்சியர்  ராஜராஜன், மாற்றுத்திறனாளித் துறை நலஅலுவலர் செண்பக வள்ளி  உள்ளிட்ட பல்வேறு துறையை  சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.