districts

img

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் ஆவேசம்

கோவை, ஜூன் 1- தலைநகர் தில்லியில் நியாயம்  கேட்டு போராடும் மல்யுத்த வீரர் களுக்கு ஆதரவாக அனைத்து  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் பதக்கங்களை குவித்து தேசத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள், இன்று தலை நகர் தில்லியில் பாலியல்  கொடுமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்.பி.,  பிரிஜ்பூசனை கைது செய்ய வேண்டும் என்கிற ஒற்றை கோரிக் கையோடு இந்த போராட்டத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக முன்னெடுத்து வரு கின்றனர். பாலியல் குற்றவாளி பாஜக எம்.பி., பிரிஜ்பூசனை கைது  செய்ய வக்கற்ற ஒன்றிய மோடி  அரசு, நியாயம் கேட்டு போராடும்  மல்யுத்த வீரர்களின் போராட் டத்தை ஒடுக்க காவல்துறையின் கொடுங்கரத்தை பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறது.

 எனவே, போராடும் தேசத்தின் பெருமை மிகு பிள்ளைகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை வலுவோடு  நடத்துவது என அனைத்து தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்களின் மகாபஞ்சாயத்து ஆகியவைகள் தீர்மானம் நிறைவேற்றியது. அகில இந்திய எதிர்ப்பு நாள் கடைபிடிப்பது என அறைகூவல் விடுத்துள்ளது. இதனையேற்று அனைத்து தொழிற்சங்களின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு, அனைத்து  தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை ஏற்றார். இதில், எல்பிஎப் வி.ஆனந்த், வணங்காமுடி, ஏஐடியுசி சி.தங்கவேலு, கே.எம்.செல்வராஜ், சி.சிவசாமி, ஐஎன்டியுசி சண்முமுகம், மதிய ழகன், சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்எப் மு.தியாகராசன், எச்எம்எஸ் தேவராஜன், பி.டி.மோகன்ராஜ், . ஏஐசிசிடியு க.பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், எஸ்டிடியு முகமது  ரபீன் உள்ளிட்ட திராளனோர் பங் கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

ஈரோடு

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்யுத்த விளை யாட்டு வீராங்கனைகளுக்கு ஆதர வாக ஈரோடு நால் ரோட்டில், மாதர்  சங்கம்,  மாணவர் சங்கம், வாலிபர்  சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட  செயலாளர் பா.லலிதா தலைமை  ஏற்றார். மாநிலத் தலைவர் வாலண்டினா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர்  எஸ்.வி.மாரிமுத்து, வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் வி. ஏ.விஸ்வ நாதன், இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ரஞ்சித்  குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். இதில்,  ஏராளமானோர் பங்கேற்று கண்டன  முழக்கங்களை எழுப்பினர்.

நாமக்கல்

எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் மல் யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், கூட்டுறவு இயக் குநர் பி.மாரிமுத்து , வார்டு உறுப் பினர் ஜோதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.