districts

எல்லா மாநில வளர்ச்சிக்குமான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் பொன். குமார் பேச்சு

கோவை, ஜூலை 15- ஒன்றிய அரசு தற்போது தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட், எல்லா மாநில  வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு கட்டு மான தொழிலாளர்கள் நலவாரிய தலை வர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அனைத்து ஆடைகளின் நல  அமைப்பு சார்பில், கோவை மாவட்ட  பெண் தையல் தொழிலாளர்களுக் கென பிரத்யேக அலுவலக திறப்பு  விழா உக்கடம், தாஜ் டவர் வளாகத் தில் திங்களன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு இந்திய அனைத்து ஆடை களின் நல அமைப்பின் செயல் தலைவர்  முகம்மது ரபீக் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் இதாயத்துல்லா, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து பொன் குமார் செய் தியாளர்களிடம் பேசுகையில், ஒன்றிய பட்ஜெட்டில் நாங்கள் நிறைய எதிர் பார்ப்பதாகவும், செய்யக்கூடிய இடத் தில் பிரதமர் மோடி இருக்கிறாரா? என் பதுதான் கேள்வி என குறிப்பிட்டார். இது வரையில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள் ளது. பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்து வமனை கட்டப்பட்டு, செயல்பட்டு வரும்  நிலையில், மதுரையில் அடிக்கல் நாட் டப்பட்ட செங்கல் மட்டுமே இருக்கிறது. அதேபோல தமிழகத்தில் இயற்கை சீற் றங்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட போது, ஒரு பைசா கூட நிதியும் தராமல், நேரில் கூட வந்து பார்க்காத பிரதமர்  மோடி, தேர்தலின் போது தமிழகத்திற்கு  பலமுறை வந்து சென்றுள்ளார். ஒன்றிய  அரசு எல்லா மாநிலங்களையும் சமமாக  கருத வேண்டும். எல்லா மாநில வளர்ச்சி களுக்குமான பட்ஜெட்டாக இந்த முறை  ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண் டும், என்றார்.