நாமக்கல், ஜன.27- சாதிய வன்கொடுமைக்கு உள்ளானவருக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்செங் கோட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மகாராஷ்டிராவில் இந்தியன் ஆயில் கேஸ் டீலர் எடுத்து தொழில் செய்வதற்கு தலித் சமூகத்தை சார்ந்தவருக்கு மட்டும் ஒப்பந்தம் செய்ய முடியும் என்கிற விதி உள்ளது. இந்நிலை யில் அவினாசிபட்டி எம்.முருகேசன் பெயரில் ஆயில் நிறுவன ஒப்பந்தம் எடுத்து கடந்த மூன்று வருடமாக கிளாப்பாளை யம் கிராமம் எளையாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் தொழில் செய்து வந்தார். வருமான வரிதுறைக்கு கணக்கு காட்டததால் முருகேசனுக்கு நோட்டிஸ் வந்ததைய டுத்து, வரி கட்ட சொல்லி கேட்டதற்கு சாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்தி மிரட்டல் விடுவித்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பெயரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டது 42 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யப்பட வில்லை. தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும். மாதம் ஒரு குற்ற செயலில் ஈடுபடும் சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முருகேசன் குடும்பத் திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனியம்மாள் தலைமை வகித்தார். இதில், மல்லசமுத்தி ரம் 1ஆவது வார்டு திமுக கவுன்சிலர் எம்.தமிழ்ச்செல்வி முன் னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆர்.தங்கராஜ். சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். தமிழ்புலிகள் கட்சி ப.செந்தமிழன் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.வெங்கடாசலம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.