districts

img

அவிநாசியில் மனமகிழ் மன்றம் அமைக்க எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் மனு

திருப்பூர், ஆக.20-  அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் மனம கிழ் மன்றம், கேளிக்கை விடுதி மற்றும் நவீன  அரசு மதுபான கடைகள் போன்றவை ஏற்ப டுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட துறையி னருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. அவிநாசி பகுதியை சேர்ந்த அனைத்துக்  கட்சியினர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துரா ஜிடம் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, அவிநாசி பேரூராட்சியில் 12, 640 குடியிருப்புகள் உள்ளன. தற்போதைய மக்கள் தொகை சுமார் 38 ஆயிரம் ஆகும். வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு  மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன. இந்த பேரூராட்சி வளர்ந்துவரும் நகரமாகும்.  இங்கு பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ் வரர் கோயில் ஊரின் மையத்தில் உள்ளது.  திருப்பூர் - கோவை, அவிநாசி - சத்தியமங்க லம், மேட்டுப்பாளையம், கோவை - சேலம் செல்லும் பிரதான சாலைகளின் பொதுப் போக்குவரத்து மையமாக உள்ளது. அரசு  மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 4500 குழந் தைகள் படித்து வருகின்றனர். இந்நிலை யில் அவிநாசி பேரூராட்சியில் மனமகிழ் மன் றங்கள், கேளிக்கை விடுதி மற்றும் நவீன அரசு  மதுபான கடைகள் அமைந்தால் பள்ளி குழந் தைகள் துவங்கி, கோயிலுக்கு வந்து செல் லும் பக்தர்கள் வரை அனைவரும் பாதிக்கப் படுவார்கள். சாலை போக்குவரத்து அதிகள வில் இருப்பதால், தொடர் விபத்துகளும் ஏற்ப டும். அவிநாசி பொதுமக்கள், சுற்றுவட்டார கிராமப்புற மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி பகுதிகளில் மனமகிழ் மன்றம், கேளிக்கை விடுதி மற் றும் நவீன அரசு மதுபான கடைகள் போன் றவை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தப் பட்ட துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்த வேண்டும். மேலும் கடந்த ஜூன் 20ஆம்  தேதி நடந்த பேரூராட்சி கூட்டத்திலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து  கட்சிகளின் சார்பில் இதனை வலியுறுத்துகி றோம். அதேபோல் அவிநாசி- சேவூர் சாலை  கான்வென்ட் வீதியில் உள்ள மதுபானக் கூடத் திற்கும் பொதுமக்கள் நலன் கருதி, கொடுக் கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.