மேட்டுப்பாளையம், அக்.5- யானைகளின் வழித்தடத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் லாறு அரசு தோட்டக்கலை பழப்பண் ணையை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து கட் சியினர் மற்றும் அமைப்பினர் ஒன்று கூடி மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள மலையடிவார பகுதி யான கல்லாறு என்னுமிடத்தில் தோட் டக்கலை துறைக்கு சொந்தமான பழப் பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1900 ஆண்டு துவக்கப்பட்ட இப்ப ழப் பண்ணையில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை, மண் மற்றும் நீர் வளம் காரணமாக மிக அரிதாக விளையும் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழ வகைகள் மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்கின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுக ளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மேலும், தாவரவியல் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் கற்ற லுக்காக இங்கு வருவதும் வழக்கம். இந்நிலையில், இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ள தாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி கொண்ட அமர்வு இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நிய மித்தது. இதன்படி, உயர் நீதிமன்றம் அமைத்த குழுவை சேர்ந்த வழக்கறி ஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறி ஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் சனியன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாணவர் கள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயி கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல் லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக் களை அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலூகா செயலாளர் கன கராஜ், மாதர் சங்கத்தின் ராஜலட்சுமி மற்றும் மேட்டுப்பாளையம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பாஷா ஆகி யோர் கல்லாறு அரசு பழப்பண்ணை யின் அவசியம் குறித்து பேசினர். மேலும், இதே இடத்தில் யானைகளின் வழித்தடத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் தனியார் கேளிக்கை பூங்காக் கள் உள்ளது. இதனை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்க ளுக்கும் மாணவர்களுக்கும் விவசா யிகளுக்கும் உதவியாக இருக்கும் அரசு பழப்பண்ணையை மூட முயற்சிப்பது நியாயமற்றது என வலியுறுத்தினர். முன்னதாக, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வ ராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல் லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும் 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற் போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றார். இதனையெல்லாம் விசாரித்தரிந்த குழுவினர் ஆவணங்களின் அடிப்படை யில் யானைகளின் நடமாடும் இடங் கள் இப்பகுதி உள்ளதா என ஆய்வு செய் தனர். அப்போது தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்விற்கு பின்னர் இது குறித்த விரி வான ஆய்வறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் தாக் கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.