நாமக்கல், ஆக 8- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவரும், மேற்கு வங்க முன் னாள் முதல்வருமான, தோழர் புத்த தேவ் பட்டாச்சாரியாவின் மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினராகவும், மேற்கு வங்க மாநிலத் தில் 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக செயல்பட்டவர் தோழர் புத்ததேவ் பட் டாச்சார்யா. இவர் வயது மூப்பின் கார ணமாக வியாழனன்று காலமானார். இவரின் மறைவையடுத்து மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சி யினர் இரங்கல் தெரிவித்து வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகே சிபிஎம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றி யச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாச லம் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ். திமுக முன்னாள் ஒன் றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், திமுக இளைஞரணி நிர்வாகிகள் த.சத்ய ராஜ், து.சதீஷ்குமார், சிஐடியு மோட் டார் சங்க நிர்வாகிகள் சக்திவேல், முனியப்பன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள் மற்றும் ஒன் றியக்குழு உறுப்பினர்கள் திரளா னோர் பங்கேற்றனர். முன்னதாக, மறைந்த தோழர் புத்ததேவ் பட்டாச் சார்யாவின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத் துக் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர். தருமபுரி தருமபுரி, செங்கொடிபுரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா உருவப்படத்துக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மலர்தூவி அஞ் சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, ஆர்.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ. அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, நக ரச் செயலாளர் சி.முரளி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், மாதர் சங்க நிர்வாகிகள் கே.சுசிலா, தமிழ்மணி, அரசு போக்குவரத்து கழக மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம், வாலிபர் சங்க நிர்வாகி குறளரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.