ஈரோடு, அக். 6- ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்க ரூ.9 ஆயிரத்து 521.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவி லான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வசதியாக்கல் கூட் டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை யில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சனியன்று நடைபெற் றது. ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற் றில், ஜவுளி தொடர்பு தொழில்கள், விவசாயம், உணவு சார்ந்த தொழில்கள், பிளாஸ்டிக், தென்னை நார் கயிறு, எலக்ட்ரிக் மற் றும் எலக்ட்ரானிக்ஸ், தோல் பொருட்கள், கட்டுமானம் தொடர்புடையவை, என்ஜினியரிங், கெமிக்கல் இன்னும் பிற அடங்கும். இவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் கடன் வழங்க ரூ.9 ஆயிரத்து 521.34 கோடி இலக்காக மாநில அளவி லான வங்கியாளர்கள் கூட்டம் நிர்ணயித்துள்ளது. இவ்விலக்கினை அடையும் வகையில் கடந்த காலாண்டு முடிவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 650.30 கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கீட்டில் 38.30 விழுக்காடு ஆகும். தொடர்ச்சியாக இரண்டாம் காலாண்டி லும் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியாண்டின் இலக்கினை அடைய அனைத்து வங்கிகளின் பங்களிப்பினையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் 13 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட் டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி கள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் என மொத்தம் 28 நிறுவனங்களுக்கு ரூ.69.93 கோடி கடன் அனு மதிக்கான ஆணையினை வழங்கினார். இதில், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ் குமார், ரிசர்வ் வங்கி அலுவலர், மாவட்ட அளவிலான வங்கி உயர் அலுவலர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.