அவிநாசி,ஜன.27 அவிநாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை விவசாயத் தொழி லாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சந் தித்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கை களை கேட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 6 வாரங்க ளுக்கு மேல் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1056 கோடி கூலி பாக்கி உள்ளது. இதை உடனே வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு நிதி நிலை அறிக்கையில் ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். நீர்ப்பாசன பணி கள், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள் செய்வதை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 30ஆம் தேதி தமி ழகம் முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதை தொழிலாளர்களிடம் கொண்டு செல்லும் வகையில், அவி நாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிக ளில் பணியாற்றும் விவசாய தொழிலா ளர்களை விவசாயத் தொழிலாளர் சங்க அவிநாசி ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து, பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், ஜன.30 ஆம் தேதி, காலை 10 மணி அளவில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அந்தத் தொழிலாளர்க ளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.