சிதம்பரம், பிப்.14- சாலையோர வியா பாரிகளை பலவந்தமாக அகற்றுவதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. மாநில ஒருங்கி ணைப்புக் குழுவின் கூட்டம் சிதம்பரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சந்தியாகு தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் தெய்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் கருப்பையன் ஆகியோர் உரையாற்றினர். பழனி மலை அடி வாரத்தில் வியாபாரம் செய்த சாலையோர வியா பாரிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நகர வெண்டிங் கமிட்டி அமைத்து மாற்று இடம் வழங்க வேண்டும். சாலை யோர வியாபாரிகள் பாது காப்பு சட்டத்திற்கு விரோத மாக சாலையோர வியா பாரிகளை பலவந்தமாக அப்புறப்படுத்துவதை கைவிட்டு வெண்டிங் கமிட்டி யில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தல் நடைபெறாத மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் உடனடியாக வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த பிஎம் ஸ்வநிதி தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பாலன், ரங்கராஜ், பிச்சைமுத்து செல்லச்சாமி, சங்க மேஸ்வரன், அப்துல் காதர், அன்சாரி, உதயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.