உடுமலை டிச.4- முப்படையில் மாணவர்களை சேர்ப்பதற் கும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது. லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன் னாள் ராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க கூட்டத்திற்கு தலைவர் ராம லிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறு வனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்க உறுப் பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக் கப்பட்டது. உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்கள் சரி செய்து கொள்ள ஆலோ சனை வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் வாழ்நாள் சான்றிதழ்கள் அளிப்ப வர்கள் உடனடியாக அளித்து அவர்களு டைய பென்ஷன் நின்று விடாமல் பாதுகாத் துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மருத்துவ உதவிகள் முறைப்படி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் முப்படையில் மாணவர்களை சேர்ப்ப தற்கும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற் கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட் டது. இக்கூட்டத்தில் மோகன், லியாகத் அலி கான், சுப்பாத்தாள் மற்றும் முத்துக்காளை உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசிக் கப்பட்டது. நிறைவாக முன்னாள் ராணுவ வீரர் உதவி செயலாளர் சுபேதார் நட ராஜன் நன்றி கூறினார்.