தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக் கையில், கல்வித்துறைக்கு கூடுத லாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது வரவேற்பை பெற்றுள்ளது என்ற போதி லும், குழந்தை பருவத்தில், கல்வி கற்பதற் கான ஆர்வத்தை தூண்டும் இடமாக அங்கன் வாடி மற்றும் சத்துணவு மையங்கள் உள் ளதை யாரும் மறுக்க மாட்டார்கள். இத்த கைய முக்கியத்துவம் வாய்ந்த அங்கன்வாடி மையங்களை கண்டும் காணாதது போல ஆட்சியாளர்கள் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட் டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,697 அங்கன் வாடி மையங்கள் உள்ளன. இங்கு 1 முதல் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். நகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான உழைப்பாளி பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தை களை பராமரிப்பதற்கு அங்கன்வாடி மற்றும் சத் துணவு மையங்களே குழந்தைகள் காப்பக மாக உள்ளது. இந்நிலையில், போதிய நிதி ஒதுக்கீடு இல் லாத நிலையில், பராமரிப்பற்ற பழுதடைந்த அங் கன்வாடி மற்றும் சத்துணவு மைய கட்டடங்க ளில் குழந்தைகள் உண்டு உறங்கி புழங்கு வது பாதுகாப்பற்ற நிலை அச்சத்தை ஏற்படுத்து கிறது. தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை என்றாலும், கோவை மாவட்டத்தில் 30 ஆண்டு களுக்கு மேற்பட்ட பழுதடைந்த நிலையில் காணப்படும் 189 அங்கன்வாடி மைய கட்டடங் களின் நிலை பரிதாபமாக உள்ளதாக அங்கன் வாடி ஊழியர்கள் வேதனையை வெளிப்படுத் துகின்றனர்.
இதுகுறித்து இத்துறை சார்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்கள் கட் டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், பெரும்பாலான கட்டடங்கள் பழு தடைந்தும், இடிந்து விழும் நிலையிலும் உள் ளன. கோவை மாநகராட்சியில் மட்டும் 94 அங் கன்வாடி மையக் கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. நகராட்சிகளில் 24 மையங் கள், பேரூராட்சிகளில் 22 மையங்கள், ஊராட்சி களில் 49 மையங்கள் என மொத்தம் 189 மையங் கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்ட டங்கள் கட்டிக் கொடுக்கக்கோரி சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் கோரிக்கை கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதற் கான முன்னெடுப்பை எடுப்பதாக தெரிய வில்லை என்றார். இதேபோல, மாநகராட்சியில் 89 மையங் கள், நகராட்சிகளில் 61 மையங்கள், பேரூராட்சி களில் 73 மையங்கள், ஊராட்சிகளில் 28 மையங்கள் என 251 மையங்களுக்கு கட்டட வசதியில்லை. இம்மையங்களில் சேர்க்கப் பட்ட குழந்தைகள் அருகிலுள்ள மையங்களில் பராமரிக்கப்படுகின்றனர். இதனால், இணைக் கப்பட்ட மையங்களில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பகுதி களிலுள்ள அங்கன்வாடி மையங்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகி றது. இடிந்த நிலையிலுள்ள 189 மையங்கள், கட்டட வசதியில்லாத 251 மையங்கள் என 440 புதிய கட்டடங்கள் தேவையுள்ளது. மேலும், கோவை மாநகராட்சியில் 36 மையங்கள், நக ராட்சிகளில் 14 மையங்கள், பேரூராட்சிகளில் 17 மையங்கள், ஊராட்சிகளில் 13 மையங்கள் என மொத்தம் 70 அங்கன்வாடி மையங்கள் கழிப் பறை வசதியில்லாமல் செயல்பட்டு வரு கின்றன. தவிர, கழிப்பறை வசதியிருக்கும் பெரும்பாலான மையங்களில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கழிப்ப றைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப் படுகிறது.
மேலும், ஊரகப் பகுதிகளிலுள்ள 412 அங் கன்வாடி மையங்கள் சுற்றுச்சுவர் இல்லாம லும் 172 மையங்கள் ஆஸ்பெஸ்டாஸ் கட்டடத்தி லும், 59 மையங்கள் பெரிய பழுதுகளுடனும் செயல்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் குழந்தைகளை பாதுகாப்பதில் அங்கன்வாடி பணியாளர்க ளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறி யாகிவுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட் டத்திற்காக பந்தய சாலை, ஆர்எஸ்.புரம் போன்ற பகுதிகளை அழகுபடுத்தவும், குளக்கரையை அழகுபடுத்துவதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அநாவசியமாக செலவு செய்கிறது. ஆனால் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது. இது தொடர்பாக துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு குழந்தைகளின் செல வினங்களுக்காக மட்டுமே நிதி ஒதுக்கீடு செய் யப்படுகிறது. உள்கட்டமைப்புகளுக்காக எந்த வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. புதிய கட்டடங்கள், கட்டட பராமரிப்பு, புனர மைப்புப் பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இல்லையெ னில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைப்பதற்கு அந்தந்த உள் ளாட்சி அமைப்புகளிடம் ஆண்டுதோறும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகி றது. இதில், ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் புதிய அங்கன்வாடி மையங் கள் கட்டித்தரப்படுகின்றன. அதேபோல சுற்றுச் சுவர், பழுதுகள் கோரிக்கையையும் நிறை வேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித் துள்ளனர். ஆனால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகளில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவோ, கட்டட பழுது களை சீரமைப்புகள் மேற்கொள்ளவோ நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால், ஊரகப் பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மிகவும் மோச மான நிலையில் காணப்படுகின்றன, என்றார். திராவிட மாடல் அரசு என சட்டை காலரை கம்பீரத்துடன் தூக்கிவிடும் அரசு, எதிர்கால தலைமுறை குழந்தைகளின் புழங்கும் இட மான அங்கன்வாடி, சத்துணவு மையங்களின் நிலை பரிதாபமாக உள்ளதையும் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பதே மக்க ளின் கோரிக்கையாக உள்ளது. (ந.நி)