கோவை, ஜூலை 18– கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சம்ப வத்தை காரணமாக கொண்டு திங்களன்று விடுமுறை என தனியார் பள்ளிகள் சங்கத்தி னர் அறிக்கை விடுத்தனர். இதற்கிடையே எக் காரணத்தை கொண்டும் விடுமுறை அளிக்கக் கூடாது என தமிழக பள்ளி கல்வித்துறை உத் தரவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத் தில் 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் விடு முறை விட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் விடு முறை விட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி சக்தி தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறை யில் உயிரிழந்தார். இதனால், பெற்றோர் கள் இறந்த மாணவியின் உடலை வாங்கா மல் போராடி வந்தனர். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்திருந்தன. அமைதி யான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் ஊடே ஞாயிறன்று ஒரு பெரும் கும்பல் பள் ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியும், பள்ளி பேருந்து களுக்கு தீவைத்தும் சூறையாடியது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்திற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர் பள்ளி சேதமடைந்த சம்பவத்தை கண் டித்து அனைத்து தனியார் பள்ளிகளும் திங்க ளன்று விடுமுறை அளிக்கப்படும் என அறி விப்பு வெளியிட்டனர். இதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டித்ததோடு மாணவர்க ளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் எக்கார ணம் கொண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. மேலும், விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறி விப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில் திங்களன்று கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளி கள் வழக்கம் போல் இயங்கின. இருப்பினும் கோவை சுகுணா, நேசனல் மாடல், வித்யா நிகேதன், கருமத்தம்பட்டி கோவை பப்ளிக் ஸ்கூல், அன்னூர் அம்பாள், பிலோகன்ஸ், நவபாரத் உள்ளிட்ட 31 தனியார் பள்ளிகள் அர சின் உத்தரவை மதிக்காமல் விடுமுறை விட் டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கல் வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தனி யார் பள்ளிகள் திறந்திருந்தது. இருப்பினும் 31 தனியார் பள்ளிகள் மட்டும் விடுமுறை அளித் துள்ளது. இதற்கான விளக்கம் கேட்டு முதற் கட்டமாக சுற்றரிக்கை அனுப்பியுள்ளோம். மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் விடுமுறை விட்ட பள்ளிகள் குறித்த விப ரங்களை அனுப்பியுள்ளோம். அரசின் உத்த ரவை மதிக்காத பள்ளிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். முன்னதாக எந்தவித அறிவிப்பும் இல்லா மல் திடீர் என விடுமுறை விட்டதால் தங்களின் பிள்ளைகளின் கல்வி பாதித்துள்ளது என மேட்டுப்பாளையத்தில் பாட்சா என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீதும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.