இனம் கண்டறியாத 169 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூர், டிச.11- தாராபுரம் வட்டத்தில் இனம் கண்டறியாத 169 பயனாளி களின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டணம் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நிலமெடுப்பு செய்து 219 நபர்க ளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்வதற் காக இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயனாளிகளை தமிழ் நிலம் மென்பொருளில் இணையவழி பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன.
இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட் டதில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 165 பயனாளி களை இனம் கண்டறியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டாவில் உள்ள நிபந்தனைப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் குடியிருப்பு வீடு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால், இந்தப் பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்குரிய விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல் லது கடிதம் வாயிலாகவோ மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவல ருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பய னாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நட வடிக்கை எடுக்கப்படும். அதேபோல, சங்கரண்டாம்பாளை யம் கிராமத்தில் இனம் கண்டறியாத 4 பயனாளிகளின் வீட்டு மனை பட்டாக்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்தடை
உடுமலை, டிச. 11- பூலாங்கிணர் துணை மின் நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் நடைபெறுவ தால், 13 ஆம் தேதி (வெள் ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள். பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்ப னூத்து, சுண்டக்காம்பாளை யம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மெடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னா லம்மன் சோலை, விளாமரத் துபட்டி, உடுக்கம்பாளை யம், கஞ்சம்பட்டி, குண்டலப் பட்டி, லட்சுமாபுரம் மற்றும் தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகள் மின்தடை படும்.