உதகை, ஜன.12- கூடலூர் செக்சன் 17 நிலப்பிரச்சனைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக் கப்படும், என நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உறுதியளித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனியன்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ரூ.5.22 கோடி மதிப்பில் முடிவுற்ற 19 திட்டப்பணி களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, 170 பயனாளிகளுக்கு ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உத விகளை வழங்கினார். தொடர்ந்து, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.73 லட்சம் மதிப் பில் ஒரு பயனாளிக்கு கட்டப்பட்டுள்ள வீடு உட்பட 170 பயனாளிகளுக்கு ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உத விகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மலை மாவட்டமான நீலகிரி மீது தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். டான்டீ தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்து, பண்டிகை கால ஊக்கத்தொகையை பழைய நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் ஏற்படும் போதெல் லாம் உடனடியாக எங்களை தொடர்புக் கொண்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். கூடலூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செக்சன் 17 நிலப் பிரச்சனைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இவ்விழாவில், கூடுதல் மாவட்ட ஆட்சி யர் (வளர்ச்சி) கவுசிக், உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, கூடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிட மணி, மக ளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி உள் பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.