கோவை, நவ.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக் குழு செயலாளராக ஆ.மேகநாதன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை பீளமேடு நகர 2 ஆவது மாநாடு, பீளமேடு ரேணுகாதேவி மண்டபத்தில் தோழர்கள் மா.ஆறுக்குட்டி, வி. அழகிரிசாமி, கே.ராசு, கே.நாச்சிமுத்து, டி. எம்பழனிசாமி ஆகியோரது நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை நகரக் குழு உறுப் பினர் டி.வி.ரமணி ஏற்றி வைத்தார். மாநாட் டிற்கு, எம்.ஜோதிபாசு, டி.வி.ரமணி, டி.சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். நகரக் குழு உறுப்பினர் ஆ.மேகநாதன் வரவேற்று பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எ.ராதிகா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். நகரக் குழு செயலாளர் கே.பாண்டி யன் வேலை அறிக்கையும், மாவட்டக் குழு உறுப்பினர் சி. ஜோதிமணி வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் உரையாற்றினார். கோவை பீளமேடு, சிங்காநல்லூர் ரயில் நிலையங்களில், ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், சிறு தொழில் முனை வோர், வியாபாரிகள் பயன்ப டுத்தி வந்தனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இங்கு நின்று சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நகரத்தில் போக்குவரத்து நெரி சலும், ரயில் பயணிகளின் நேர மும் விரையம் ஆகிறது. எனவே பீளமேடு, சிங்காநல்லூரில் நின்று சென்ற ரயில்களை மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சிக்குட்பட்ட, கொடி சியா மேற்கு பகுதியிலிருந்து விளாங்குறிச்சி ரோடு முதல் என்ஆர்ஐ கார்டன் வழியாக கொடிசியா அவிநாசிசாலை வரை சுமார் 3 கிலோ மீட்டர், தனியாரிடம் இருந்து நிலங் களை எடுத்து திட்டச்சாலை உருவாக்கினால், வார்டு எண் 22,9,5 மற்றும் 8 ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாகவும், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் இருக்கும் என் பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து, பீளமேடு நக ரக் குழு செயலாளராக ஆ.மேகநாதன் மற்றும் 13 பேர் கொண்ட நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார் நிறைவுரையாற்றினார். கிளைச் செயலாளர் பி.ஏ.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.