கோவை, நவ.25- மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகாச் செயலாளராக ஏ.சந்தி ரன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், சூலூர் தாலுகா 11 ஆவது மாநாடு சூலூர் எஸ்ஆர்எஸ் திருமண மண்டபம், தோழர்கள் சி.குரு சாமி மற்றும் திருமலைசாமி நினைவரங்கத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டில், எம். ஆறுமுகம் கொடியேற்றி துவக்கி வைத்தார். ஜெ.ரவீந்திரன், வி. பாலகிருஷ் ணன் மற்றும் கே.லலிதாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சூலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி வரவேற்புரை யாற்றினார். தாலுகா குழு உறுப்பினர் பார்த்த சாரதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் முருகேசன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். தாலுகாச் செயலா ளர் ஏ.சந்திரன் வேலை அறிக்கையும், ஸ்டாலின்குமார் வரவு-செலவு அறிக்கையும் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சூலூர் தாலுகாச் செயலாளராக ஏ.சந்திரன் மற்றும் 11 பேர் கொண்ட தாலுகா குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்ட னார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் நிறைவுரையாற்றி னர். முடிவில், சூலூர்கட்சி கிளைச் செயலா ளர் ராஜப்பா நன்றி கூறினார். இதில், சூலூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவையை அதிகப்படுத்த வேண்டும். சூலூரில் அரசு கலைக் கல்லூரி அமைத்திட வேண்டும். அரசு சார்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்திட வேண்டும். இருகூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.