districts

img

ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

தருமபுரி, செப்.11- காரிமங்கலம் அருகே சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட் களை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழி யாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக் கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில், புதனன்று அதிகாலை 4 மணிக்கு காரிமங்கலம் அருகே  உள்ள கும்பாரஅள்ளி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 சொகுசு காரை தடுத்தி  நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா இருந்தது  தெரிய வந்தது. மேலும், காரை ஓட்டி வந்த  இருவரையும் பிடித்து விசாரித்ததில் கேரளா  மாநிலம், மன்னார்காட்டை சேர்ந்த ஜிதிஷ் (45), சர்பின் (29) ஆகியோர் என்பதும், கர்நா டகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கேர ளாவிற்கு குட்கா கடத்தி செல்ல முயன்ற தும், தப்பி ஓடியவர்கள் ஜீபீர் மற்றும் ஜிபித் என தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 2  சொகுசு கார்களுடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஜிதிஷ், சுருபின் ஆகி யோரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.