திருப்பூர், பிப்.26 - திருப்பூர் வாவிபாளை யம் பகுதியில் தனியா ருக்கு சொந்தமான எலாஸ் டிக் உற்பத்தி தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட லாரி களில் தண்ணீர் கொண்டு வந்து தீயணைப்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள் ளனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தனியார் எலாஸ்டிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந் நிலையில் ஞாயிறன்று விடுமுறை என்ப தால் தொழிலாளர்கள் வேலைக்கு வர வில்லை. இந்நிலையில் ஞாயிறன்று மாலை, நிறுவ னத்தின் ஒரு பகுதியில் இருந்து திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறை யில் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் நிறுவனம் முழு வதும் தீ பரவி உள்ளே இருந்த அனைத்து எலாஸ்டிக் பொருட்களும் நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரி உதவியுடன் திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.