districts

img

சிறைவாசி உருவாக்கிய சோலார் ஆட்டோ

கோவை, டிச.10- கோவை மத்திய சிறையில், சூரிய ஒளி மின்சக்தி மூலம்  இயங்கும் ஆட்டோவை சிறைவாசி ஒருவர் உருவாக்கி அசத்தி உள்ளார். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). இவர் கொலை வழக்கு தொடர்பாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் கடந்த  7 ஆண்டுகளாக உள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்  பட்டதாரியான இவர், சிறையில் தொழிற் கூடத்தில் பணி யாற்றி வருகிறார்.

இதுதவிர, கிடைக்கும் சாதனங்களைக் கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவ தில் ஆர்வம் கொண்டவர். இவர், சில மாதங்களுக்கு முன்னர்  சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் சைக்கிளை வடிவ மைத்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக சில நாட்க ளுக்கு முன்பு சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்து உள்ளார். இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முக  சுந்தரம் கூறுகையில், ஆட்டோவின் மீது சூரிய ஒளி உற்பத்திக் கான தகடு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோவில் ஓட்டுந ரின் இருக்கைக்கு அடியில், இதற்கான பேட்டரி உள்ளிட்ட  கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. சூரிய மின்சக்தி  மூலம் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால், 200  கிலோ மீட்டர் தொடர்ச்சியாக ஓட்டலாம். 35 கி.மீ. வேகத்தில்  ஆட்டோவை ஓட்டலாம். இ

தில், ஓட்டுநர் உட்பட 8 பேர்  வரை அமர்ந்து செல்லலாம். எல்.இ.டி விளக்கு, ஹாரன், ஹேன்ட் பிரேக், டேப் ரிக்கார் போன்ற வசதிகள் உள்ளன.  சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆட்டோ நல்ல முறையில் உபயோகமாகிறது. இதன் தயா ரிப்பு செலவு ரூ.1.25 லட்சம் ஆகும். இதுபோல் மேலும் 2  ஆட்டோக்கள், ஓர் ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது, என்றார். இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் கூறும்போது, தற்போது இந்த ஆட்டோ கோவை  மத்திய சிறையின் உட்புறத்தில் சமையற் கூடங்கள் உள் ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சோதனைப் பயன்பாடு முடிந்தவுடன், சிறைக்கு கைதிகளை சந்திக்க  வரும் உறவினர்களில் வயதானவர்கள், நடக்க முடியாத வர்கள் அமர்ந்து நுழைவு வாயிலில் இருந்து பார்வை யாளர் அறைக்கு அழைத்துச் செல்ல இந்த ஆட்டோ பயன் படுத்தப்படும்” என்றார்.