districts

img

பொள்ளாச்சி அடுத்த நவமலை சாலையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை - குடியிருப்பு வாசிகள் அச்சம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை சாலையில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் மின்சார வாரிய குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மின்வாரிய குடியிருப்புகள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் உள்ள மாணவ மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளி செல்வதற்காக நவமலையில் இருந்து ஆழியாறு மற்றும் ஆனைமலை பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இவர்களுக்குப் பிரதான சாலையான நவமலை முதல் ஆழியாறு வரை  8 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிகள் கடந்து தான் செல்ல வேண்டும்.  இந்த நிலையில்   சில்லி கொம்பன் என்று அழைக்கக்கூடிய  ஒற்றைக் காட்டு யானை நவமலை சாலையில் ஒய்யாரமாக உலா வருகிறது

இதனால் நவமலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் சாலையைக் கடப்பதற்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும்  அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் வனத்துறையினர் இரண்டு குழுக்களை அமைத்து யானையைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.