ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
கோவை, ஜூலை 1- கோவை தடாகத்தையடுத்த, திருவள்ளுவர் நகரில் இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையால் பொது மக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னி மடை தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்து விடுகிறது. இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவில், தடாகம் சாலை திருவள்ளுவர் நகருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒருவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முற்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனி டைய வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேத மடைந்தன. அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரு வதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு முழு ஓய்வூதியம்
தருமபுரி, ஜூலை 1- இருபது ஆண்டுகள் பணியாற்றியவர் களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குமாறு தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் பேரவைக் கூட்டம், தரும புரி ஊர்தி ஓட்டுனர் சங்க அலுவலகத்தில் சனி யன்று நடைபெற்றது. தலைவர் ஏ.மணி தலைமை ஏற்றார். வட்ட செயலாளர் பி.முனி ராஜ், வட்ட பொருளாளர் எம்.பாபு ஆகியோர் அறிக்கை முன்வைத்தனர். மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வாழ்த்தி பேசினார். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சத விகித ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 20 ஆண்டு பணியாற்றி யவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பணி யாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணபலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நுண்ணுயிர் உரக்கிடங்கில் தீ விபத்து
கோவை, ஜூலை 1- கோவையிலுள்ள நுண்ணுயிர் உரக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் 57 ஆவது வார்டுக்குட்பட்ட ஒண்டிப்புதூர் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நுண்ணுயிர் உரக்கிடங்கில் சனியன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. உரக்கிடங்கில் தீ பிடித்த உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை யினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந் தனர். இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கி டங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் குமரன், கோவை மாநகராட்சி உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் ஜீவன் முருகதாஸ், கவுன்சிலர் சாந்தா மணி ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த தீவிபத்து சம்பவத்தையறிந்து, திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் அப் பகுதியை பார்வையிட்டார். இந்த தீ விபத்தில் யாரும் இல்லாத நேரத் தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப் பட்டுள்ளன.
கஞ்சா விற்ற நபர் கைது
கோவை, ஜூலை 1- கோவையில் கஞ்சா விற்ற வடமாநில நபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கோவை, சரவணம்பட்டி போலீசார் வெள்ளியன்று ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது இந்து நகர் ஜங்சன் சுடுகாடு அருகே சந் தேகம்படும் படி நின்றிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணை யில், அவர் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீ சார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த மாண்டேஸ்குமார்(20) என்ப வரை போலீசார் கைது செய் தனர். அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத் தின் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.
மருத்துவக்கல்வி விண்ணப்பிக்க ஜூலை 10 அவகாசம்
திருப்பூர், ஜூலை 1 - நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர் களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன் லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஜெய் வாபாய் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசி ரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையத ளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப் பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விப ரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார். இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/ https://tnmedicalselection.net/ என்ற இணையதளத் தில் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 3 மின் தடை
அவிநாசி, ஜூலை 1- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் திங்க ளன்று (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரியத் தினர் தெரிவித்துள்ளனர். மின் தடை ஏற்படும் பகுதிகள்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா - பச்சாம்பாளையம், பரமசி வம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பா ளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பா ளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திரு மலைநகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பா ளையம் சிட்கோ. 15.வேலம்பாளையம் - ஆத்துப்பாளையம், அனுப்பர் பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங் கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி. லேஅவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டி பாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லேஅ வுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுரு கன்பூண்டி விவேகானந்த கேந்தரா பகுதி, டிடிபி மில்.
அவிநாசி அரசு கலை கல்லூரிக்கு ரூ.5.36 லட்சம் நிதி ஒதுக்கீடு
அவிநாசி, ஜூலை 1- தமிழ் வளரச்சித் துறை சார்பில் அவி நாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரிக்கு ரூ.5.36 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிக்கு, முதல் முறையாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.5.36 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் நளதம், தமிழ் துறை தலைவர் மணிவண்ணன் ஆகி யோர் கூறியதாவது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஒதுக்கப்பட்ட இத் தொகை வங்கியில் வைப்புத் தொகை யாக வைக்கப்படும். பிறகு இதன் மூலம் ஆண்டு தோறும் வரும் வட்டித் தொகை ரூ.36 ஆயிரத்தை தமிழ் வளர்ச்சிக் காகவும், கல்லூரி மாணவர்களுக்கு கலை, பண்பாடு, மொழி திறன் இலக்கிய போட்டிகள் உள்ளிட்ட தமிழ் துறை விழாக்கள் நடத்த உதவியாக இருக் கும். இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரி விக்கிறோம். மேலும், கல்லூரியில் வணிகவியல், வேதியல், கணனி அறிவியல், வணிக நிர் வாகம், தமிழ் துறை உட்பட 7 துறை கள் உள்ளன. ஆனால் இது வரை தமிழ் இலக்கியத் துறை பாடப் பிரிவு இல்லை. ஆகவே தமிழக அரசு, விரைவில் அவி நாசி அரசு கல்லூரிக்கு தமிழ் இலக்கியத் துறை பாடப்பிரிவு அறிக்க வேண்டும் என்றனர்.
லாரி மோதி இளைஞர் பலி
அவிநாசி, ஜூலை 1 - பெருமாநல்லூர் அருகே காளம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இளை ஞர் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவி வெங்கடேஷ் மகன் தனமோகன்(33). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பெருமாநல்லூர் நோக்கி சென்று கொண்டி ருந்தார். காளம்பாளையம் பாலஜி நகர் அருகே சென்ற போது, எதிரே அதிகவேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தனமோகன் திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பத்ம விருது
திருப்பூர், ஜூலை 1- கலை, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங் குபவர்கள் பத்ம விருதுக ளுக்கு ஜூலை 7 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினவிழாவின் போது 2024 ஆம் ஆண்டுக் கான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள் ளன. திருப்பூா் மாவட்டத்தில் கலை, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறந்து விளங்குபவர் கள் ஜூலை 7 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.
அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும்
விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் முறையீடு
ஈரோடு, ஜுலை 1- அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி கள் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடமிருந்து 75 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. முன்னதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கார பேசுகை யில், ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழைய ளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 30.06.2023 வரை 264.83 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தற்போது 77.73 அடியாகவும், 14.51 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரி வாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதை கள் 103.407 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 7 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 10.629 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 100.063 மெட்ரிக் டன் உள்ளிட்ட நடப்பு பருவத் திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. கீழ்பவானி ஆயக்கட்டு கசிவுநீர் பாசன பகுதியில் சாகு படி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்துள்ள பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் காஞ்சிகோயில் என்ற இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளை வித்த நெல்லினை மேற்கண்ட கொள்முதல் நிலையத்தில் விற்று பயன்பெறலாம் என்றார். இக்கூட்டத்தில் மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராம ஆதிதிராவிடர் நிலங்களுக்கு கீழ்பவானி வாய்க்காலில் மதகு அமைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என எல்பிபி பாசன கால்வாய் மதகுகள் மீட்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் சொங்கப்பன் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையுடன், அனுபவத்தில் உள்ள நிலங்க ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்கள் மற்றும் நிபந்தனை நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறையிலும் காலிப் பணியிடங்களை இட ஒதுக்கீட்டின்படி நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டது. இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த புதனன்று அரச்சலூரில் ஏ.பி.மாதவன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, தாலுகா செய லாளர் கே.பி.கனகவேல், தாலுகா கமிட்டி உறுப்பினர் சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயக் நிலத்தில் புகுந்த புள்ளி மான்
நாமக்கல், ஜூலை 1 நாமக்கல் மாவட்டம். பள்ளி பாளையம் அடுத்துள்ள பாப்பம் பாளையம் பகுதியில், கிருஷ்ணா என்ப வருக்கு சொந்தமான விவசாயக் நிலத்தில்,சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க புள்ளிமான் ஒன்று சுற்றி திரி கிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த புள்ளிமானை மாலை நேரங்களில் மட்டுமே நாங்கள் காண்கிறோம். இந்தப் புள்ளிமான் எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. ஆட்கள் நடமாட்டத்தை கண்டதும், ஓடிவிடுகிறது. புள்ளிமான் யாருக் கும் எவ்வித தொந்தரவும் கொடுப் பதில்லை. விவசாய நிலத்தின் நடுவில் சிறிய அளவிலான குட்டையில் நீர் தேங்கி உள்ளதால் அந்த நீரை குடிப் பதற்காக மட்டுமே வெளியே வரு கிறது. இப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் உள்ளிட்ட ஏதேனும் விலங்கி னங்கள் புள்ளிமானை தாக்கக்கூடிய அபாயம் இருப்பதால், வனத்துறை யினர் புள்ளி மானை மீட்டு அதற் குரிய வாழ்விடத்தில் விட வேண்டும் என்றனர். தற்போது இந்த புள்ளிமான் குறித்த படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.