districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவிலுக்குள் நுழைந்த ஒற்றை யானை

கோவை, நவ.14- பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி கோவில்,  கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள் ளது. அடிவார பகுதியில் அமைந்துள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் பலரும் வழிபாடு நடத்தி செல்வது வழக் கம். இதனால், அந்தக் கோவில் வளாகத்தை சுற்றி தேங்காய், பழம் உட்பட பூஜை பொருள்கள் மற்றும் பொம்மை கடை கள் வியாபாரம் நடந்து வருகிறது.  இந்நிலையில், புதனன்று  அங்கு அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்திற்கு திடீ ரென வந்தது ஒரு ஒற்றைக் காட்டு யானை. அதை கண்ட  மக்கள் அலறினர். அங்கேயே யானை சுற்றி திரிந்ததால் பட் டாசு வெடித்து விரட்ட முயற்சித்தனர். ஆனால் பட்டாசு சத் தத்தை கேட்டு கோபமடைந்த யானை, ஆக்ரோஷமாக பட் டாசு வெடித்த இடத்திற்கு ஓடியது. பின்பு அங்கு இருந்த வர்கள் கூச்சலிட்டதால் நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கி ருந்து வெளியேறியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறைக் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

சேலம், நவ.14- ஆத்தூர் கிளை சிறைக் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளைச் சிறை யில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் என்பவர் அடைத்து வைக் கப்பட்டுள்ளார். இந்நிலையில், செவ்வா யன்று இரவு யோகேஸ்வரனை,  ஐந்து கைதி கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாய மடைந்த யோகேஸ்வரன் ஆத்தூர் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொ) வினோத் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஆத்தூர் கிளைச் சிறையில் இரவு பணியாற் றிய முதல் நிலை தலைமைக் காவலர் செந் தில்குமார், இரண்டாம் நிலைக் காவலர் ராஜவர்மன் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற 5 கைதிகளும் சேலம் மத்திய  சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும், அவர்க ளது உறவினர்கள் மூன்று மாத காலம் பார்க் கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

சேலம், நவ.14- சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, பயிர் செய் துள்ள இடத்தில் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் 170 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம்  விமான நிலையத்தை, 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காம லாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய  ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வரு கிறது. இதற்காக பல கட்டங்களாக நிலம் அளவிடும் பணி நடை பெற்றது. இந்நிலையில், புதனன்று காமலாபுரம் கிராமத்தில் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 80 ஏக்கர்  நிலத்தை அளவிடும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவ சாயிகள், எடுக்கப்படும் நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை அறி விக்காமல், பயிர்கள் விளைந்து வரும் நிலத்தில் கால் வைக் கக்கூடாது. பிள்ளைப் போல வளர்க்கும் பயிர்களை சிதைக்க  விட மாட்டோம், என்றனர். இதனால், அதிகாரிகள் நிலம் அள வீடு செய்யாமல் திரும்பிச் சென்று, அருகிலுள்ள பகுதிக ளுக்கு சென்று பணியை மேற்கொண்டனர்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடுக

மருத்துவர் சங்கம் வலியுறுத்தல் சேலம், நவ.14- மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், என இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள்  தேசிய துணைத்தலைவரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான பிரகாசம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் புத னன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு  ஐந்து வருட சிறை தண்டனை 2008 ஆம்  ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், 16  ஆண்டுகள் ஆகியும், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது வரை 11 பேர் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்ற வாளிகள் அதிகார, ஆள் பலம் மிக்கவர்க ளாக உள்ளதால், காவல் துறையினர் நடவ டிக்கை எடுக்க தயங்குகின்றனர். எந்த மருத்து வரும் தவறு செய்ய வேண்டும் என்ற நோக் கில் செயல்படுவது இல்லை. இனி வரும் காலங்களில் அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் மருத்து வர்களும், மருத்துவமனைகளும் இல்லா மல் போய்விடும். இனி வரும் காலங்களில் குற்ற சம்பவங் கள் நடைபெற்றால் 12 மணி நேரத்தில் வழக் குப்பதிவு செய்ய வேண்டும். 15 நாட்களுக் குள் குற்ற நகல் வழங்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனையில் முக்கிய இடங் களுக்கு மருத்துவமனை நிர்வாகமும், காவல் துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும். குற் றம் செய்யும் நபர்கள் மீது பிணையில் வெளியே வர முடியாத அளவிற்கு கடுமை யான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங் கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றாவிட்டால், எங்களு டைய போராட்டம் தொடரும், என்றார். முன்ன தாக, இந்த பேட்டியின்போது இந்திய மருத் துவர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர்  பகத்சிங், செயலாளர் குமார், பொருளாளர் மோகனசுந்தரம், துணைத்தலைவர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் கிண்டியில் அரசு மருத்துவர் தாக்கப்பட் டதை கண்டித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்க லம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள், மருத்துவ மாணவர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநர் பலி 

பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநர் பலி  திருப்பூர்,நவ.14-   நியூ திருப்பூரில் புதனன்று இரவு பனியன் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் உயிரிழந்தார் 20  க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயமடைந்தனர். நியூ திருப்பூர் பகுதியில் நேதாஜி ஆயத்த ஆடை தொழிற் பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து புதன் இரவு பணி முடிந்து 50 க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களை ஏற்றிக்கொண்டு பனியன் நிறுவன பேருந்து புறப்பட் டுள்ளது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து நியூ  திருப்பூர் வளாகத்துக்கு உள்ளேயே சாக்கடை கால்வாயில்  இறங்கி சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.   பேருந்தில் இருந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலத்த  காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  காவலர்கள் ஓட்டுநர் ஆனந்தகுமார் மற்றும் காயமடைந்த  தொழிலாளர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனையில் ஓட்டுநர் ஆனந் தகுமார் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து  பெருமாநல்லூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் விருதிற்கு விண்ணபிக்க அழைப்பு

திருப்பூர், நவ.14- 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவள்ளு வர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் அண்ணல் அம்பேத் கரின் பெயரில் பட்டியல் இன  மக்களின் முன்னேற்றத் திற்கு அரிய தொண்டு செய்ப வருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருது வழங்கப் பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம் பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள நபர் களிடமிருந்து விண்ணப்ப  படிவங்கள் வரவேற்கப்ப டுகின்றன. விண்ணப்பங் களை திருப்பூர் மாவட்ட ஆட் சியர் வளாக எண் 113 ல்  உள்ள மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று,   நவம்பர் மாத இறுதிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ் சல் மூகமாகவோ அனுப்பி  வைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார்.

சபரிமலை சீசன்: சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், நவ.14- சபரிமலை சீசனை முன்னிட்டு, ஹூப்ளியிலிருந்து கோட்ட யத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை சீசன் துவங்கியுள்ள  நிலையில், நவ.19 ஆம் தேதி முதல் ஜன.14 ஆம் தேதி வரை  செவ்வாய்க்கிழமைகளில் கர்நாடகா மாநிலம், ஹூப்ளியிலி ருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் ஹூப்ளி - கோட்டயம்  வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07371), மறுநாள் நண்பகல்  12 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். மறுமார்க்கத் தில் நவ.20 ஆம் தேதி முதல் ஜன.15 ஆம் தேதி வரை கோட்ட யத்தில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்படும்  கோட்டயம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07372),  மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு ஹூப்ளி ரயில் நிலை யத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப் பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, பிரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று  செல்லும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய், சேய் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.14- தாயும், சேயும் உயிரிழக்க காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சிபிஎம் தருமபுரி மாவட் டச் செயலாளர் அ.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடத்தூர் அருகேயுள்ள புதுர ெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல கண் ணன் என்பவரின் மனைவி சந்தியா, புதனன்று  பிரசவத்துக்காக தருமபுரியிலுள்ள பாஜக பிர முகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பாஸ்கரனுக்குச் சொந்தமான மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், செவி லியர்கள் பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும்  உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகத் தின் அலட்சியப்போக்கே இத்தகைய கொடூர  சம்பவத்துக்குக் காரணமாகும். இதனை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண் டிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற் கொண்டு, மருத்துவமனை நிர்வாகத்தின் மீது  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட் டுள்ளது.

வாய்க்கொழுப்பாக பேசிய அர்ஜூன் சம்பத் மகன் கைது

கோவை, நவ. 14- நக்கீரன் ஆசிரியரின் நாக்கை அறுத்துவிடுவேன் என  வாய்க்கொழுப்பாக பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது செய்யப் பட்டார். ஈஷா மையம் குறித்த செய்திகளை வெளியிட்ட நக்கீரன்  வார இதழை  கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த  மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி  மாநிலத் தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால்  நாக்கை அறுக்க வேண்டும் என பேசினார். இது தொடர் பாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில், ஓம்பார் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி சார்பில்  தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில் ஓம்கார் பாலாஜி புதனன்று கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து வியா ழனன்று கோவை நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி ஆஜர் படுத் தப்பட்டு, சிறையில் அடைத்தனர்.

போதை காளான் பறிமுதல்: 5 பேர் கைது

போதை காளான் பறிமுதல்: 5 பேர் கைது கோவை, நவ.14- கோவையில் ரூ.14 லட்சம் மதிப்பு உள்ள போதை காளான், கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி  வைத்து இருந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களி டன் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், தீனம்பாளை யம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்த மான இடத்தில் போதை காளான்களை விற்பனை செய்வ தாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வியாழனன்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.   இந்த சோதனையின் போது, வீட்டில் பதுக்கி வைத்து இருந்த சுமார் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பு உள்ள 589  கிராம் எடை கொண்ட அதிக போதை தரக் கூடிய போதை  காளான் (Albino Pinus Envy Pinus Envy Anesis Albino Chocolate Crinkle Brain), 1.050 கிலோ எடைகொண்ட ரூ. 40  ஆயிரம் மதிப்பு உள்ள கஞ்சா, சுமார் ரூ. 79 ஆயிரம் மதிப்பு  உள்ள 13 கிலோ குட்கா ஆகியவை சோதனையில் சிக்கி யது.  மேலும், இந்த போதைப்பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய, நான்கு இரு சக்கர வாகனங்கள், 5 செல்போன்கள், 1 பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 1 எடை  போட பயன்படும் தராசு ஆகியவற்றை போலீசார் பறிமுதல்  செய்தனர். மேலும், விசாரணையில் தீனம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் வீட்டை ரூ 8  ஆயிரம் வாடகைக்கு எடுத்து பி.என்.புதூரை சேர்ந்த அமரன்,  பெங்களூரை சேர்ந்த ஜனாதன், ஆலாந்துறையை சேர்ந்த பிரசாத், நரசீபுரத்தை சேர்ந்த சரவணகுமார், மற்றும் சாய்பாபா காலணியை சேர்ந்த நிஷாந்த் ஆகியோர் கஞ்சா,  மற்றும் போதை காளான் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடு பட்டது தெரியவந்துள்ளது. அதையடுத்து 5 பேரை யும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு தருமபுரி, நவ. 14- சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் வசித்து  வரும் கூலித் தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 10ம் வகுப் பில் தேர்ச்சி பெறாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.  கடந்த 6 மாதத்திற்கு முன்பு பென்னாகரத்தில் உள்ள பாட்டி  வீட்டிற்கு சென்றவர் பென்னாகரம் அடுத்த குளாத்திரம்  பட்டியை சேர்ந்த நேதாஜி (வயது.25) என்ற வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதனையறிந்த சிறுமியின்  பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பொருட்படுத்தாத  சிறுமி, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி யுள்ளார். பின்னர் சிறுமி வாலிபரை திருமணம் செய்து  கொண்டு அவரது வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற் பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதும், 3 மாத  கர்ப்பமாக இருப்பதும்  தெரிய வந்தது. 17 வயது சிறுமி கர்ப்ப மானது குறித்து பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்து வர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வாலிபர் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

குழந்தை வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்கு

சேலம், நவ.14- ஆத்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி அலு வலகத்தில் உள்ள அலுவலக கண்காணிப் பாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. பணம் மோசடி செய்ததாக, ஆத்தூர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சம் யுக்தா ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், ஆத்தூர் வட் டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவல கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பணிபு ரிந்து வரும் மோகன் என்பவர், அரசு விதி முறைகளை மீறி போலியாக ஆவணங் களைத் தயாரித்து மோசடி செய்துள்ளார்.  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், நகர காவல் ஆய்வாளர் சி.அழகுராணி, உதவி ஆய்வாளர் டி.சக்திவேல் ஆகியோர், மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுடுகாட்டில் மின்விளக்கு வசதி அரசுக்கு கோரிக்கை

தருமபுரி நவ.14- பெரும்பாலை சுடுகாட்டில் மின்விளக்கு  வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை பகுதியில் 600க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை பெரும்பாலை பேருந்து நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படு வது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு வருட  காலமாக, சுடுகாட்டில் உள்ள தெருவிளக்கு எரியாததால், மாலை மற்றும் இரவு நேரங்க ளில் இறுதி சடங்கு செய்யும் பொழுது, வெளிச் சம் இல்லாததால் பெரிதும் பொதுமக்கள் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெளிச்சத்திற்காக டார்ச் லைட் மற்றும் மெழு குவர்த்தியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த சுடுகாடு வழியாக தான் மலை யூர் காடு, பொடரங்காடு, கேஸ் குடோன் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய பொது  வழித்தடம் அமைந்துள்ளது. இவ்வழியாக செல்லும் மக்களும் சிரமப்பட்டு வருகின்ற னர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வா கத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும், இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடன டியாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

எடைகுறைவாய் பிறந்த இரட்டை குழந்தைகள்: சிகிச்சையளித்து அரசு மருத்துவர்கள் சாதனை

ஈரோடு, நவ.14- எடைகுறைவாக பிறந்த இரட்டை குழந்தைகள் மூச்சுத்திணறல் கோளாறு  காரணமாக, ஈரோடு மாவட்டம், தந்தை  பெரியார் அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், அரசு மருத்துவர்கள் முனைப் போடு சிறப்பான சிகிச்சையளித்து வீட் டிற்கு அனுப்பிவைத்தனர்.  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, இரும்புபாலம் பகுதி யைச் சேர்ந்த கோமதி - தாமோதரன் தம்பதியினருக்கு கடந்த செப்.2 ஆம்  தேதியன்று ஈரோட்டில் உள்ள தனியார்  மருத்துவமனையில் 27 வாரங்களே  ஆன குறைமாத பிரசவம் நடைபெற்றது. மிகவும் எடைகுறைவான இரட்டை பெண் குழந்தைகள் (முதல் குழந்தை – 940 கிராம் மற்றும் 2 ஆம் குழந்தை – 680 கிராம்) எடையில் பிறந்த இரு குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் கோளாறு இருந்து வந்தது.  தம்பதியினரின் விருப்பத்தின்  பேரில் தனியார் மருத்துவமனையி லிருந்து, தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சி ளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை  பிரிவில் செப்.4 ஆம் தேதியன்று அனும திக்கப்பட்டனர். இக்குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சை யின் காரணமாக இரு குழந்தைகளின் உடல்நிலை சீராகி, நல்ல முன்னேற்றம்  கண்டு, உடல் எடை அதிகரித்துள்ளது. தற்போது இரு குழந்தைகளின் எடை முதல் குழந்தை - 1.70 கிலோ மற்றும் இரண்டாம் குழந்தை - 1.050 கிலோ ஆகும்.  தாயும், இரு பெண் குழந்தைகளும் 69 நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு வந்த  நிலையில் திங்களன்று நலமுடன் வீட் டிற்கு அனுப்பி வைக்கப்பட்னர்.

சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் பழுது அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நாமக்கல், நவ.14- பள்ளிபாளையம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை யில் மின்விளக்குகள் பழுதடைந்ததால், வாகன ஓட்டிகள் அச் சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்  பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில்வே சுரங்கப்பாதை கட் டப்பட்டது. திருச்செங்கோடு - நாமக்கல்லை இணைக்கும் முக் கிய சாலையாகவும், தினந்தோறும் அதிகளவு பொதுமக்கள்  பயன்படுத்தும் சாலையாகவும் இது இருந்து வருகிறது. இந் நிலையில், இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாததால், இவ்வழியே இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத் துடனே செல்கின்றனர். சுமார் 15க்கும் மேற்பட்ட மின்விளக்குக ளில் 3 மின்விளக்குகள் மட்டுமே எரிவதால், போர்க்கால அடிப் படையில் மின் விளக்குகளை சரி செய்து வாகன ஓட்டிக ளின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.