கோவை, ஏப். 13- எஸ்.எஸ்.குளம் பகுதிக்குட்பட்ட கைக்கோளாம்பாளையம் பகுதி யில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என்கிற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் புதிய ரேசன் கடை அமைக்கப் பட்டது வரவேற்பை பெற்றுள்ளது. கைக்கோளம்பாளையம் பகுதி யில் ரேசன் கடை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இதர அரசியல் இயக் கங்களும் இதற்காக தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வந்தன. இந்த முயற்சியின் காரணமாக மாவட்ட வழங்கல் துறை சார்பில் கைக்கோளம் பாளையத்திற்கு பகுதி நேர ரேசன் கடை ஒதுக்கீடு செய் யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட கடையின் திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக எஸ்.எஸ். குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், வெள்ளானைப்பட்டி ஊராட்சி செயலாளர் ராசு, ஊராட்சி தலைவர் கவிதா, மார்க்சிஸ்ட் கட்சி யின் எஸ்எஸ்.குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன், வெள்ளியங் கிரி மற்றும் சிபிஐ ஒன்றிய செய லாளர் மோகன், சிபிஐ மூத்த தலைவர் ரங்கராஜன், சிபிஎம் கைக்கோளம் பாளையம் நிர்வாகிகள் மற்றும் வெள்ளானைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர் வாகிகள் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். நீண்ட கால கனவு நனவாக மாறிய தால் அப்பகுதி மக்கள் பகுதி நேர ரேசன் கடையில் மகிழ்சியோடு பொருட்கள் வாங்கி சென்றனர். மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வந்த நிலையில், தற்போது தங்கள் குடி யிருப்பு பகுதியிலேயே ரேசன் கடை வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கான தொடர் முயற்சி மேற் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.