திருப்பூர், பிப். 19 - பிரசவ உதவித் தொகைக்கு விண்ணப்பிப்ப தற்காக பிறந்து சில நாட்களே ஆன குழந்தையைவே றொரு பெண்ணிடம் ஒப்ப டைத்துவிட்டுச் சென்ற தாயி டம் அந்த குழந்தை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி யன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை ஒரு பெண் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டுத் தலைமறைவானார். இது குறித்து பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் அந்த குழந்தையை திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த னர். குழந்தையின் பெற்றோர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த குழந்தையின் பெற்றோர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபூலு வபட்டி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதியன்று திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை முடிந்து கடந்த 15 ஆம் தேதியன்று குழந் தையை வீட்டுக்கு எடுத்து செல்லும் வழியில் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்த தால், குழந்தையின் தாயார் பேருந்து நிலை யத்தில் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் குழந் தையை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அத்துடன் பிரசவ உதவித் தொகைக்கு விண் ணப்பிக்க, தனது வீட்டுக்குச் சென்று வங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்து வரப் போனதா கவும் கூறியிருக்கிறார். மொழிப் பிரச்சனை காரணமாகவும், வீட்டில் இருந்து திரும்பி வரத் தாமதமானதாலும் குழந்தையைத் தவற விட்டதாகக் கூறியிருக்கிறார். குழந்தைகள் நலக்குழுவினர் அந்த குழந் தையின் பெற்றோரிடம் விசாரித்து, ஆவ ணங்களைச் சரி பார்த்துள்ளனர். இதைய டுத்து திங்களன்று மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் மூலம், அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.ரியாஸ் அஹமது பாஷா, குழந்தைகள் ந லக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றோர் வசம் ஒப்படைத் தனர்.