districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடியிருப்புக்குள் உலா வந்த சிறுத்தை

உதகை, மார்ச் 22- கட்டபெட்டு அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த  சிறுத்தையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, கரடி, காட் டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தேடி குடி யிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  கட்டபெட்டு அருகே இளிதொரை மணிஹாட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வருவது  அங்கு பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை  கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத் துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்

 ஈரோடு, மார்ச் 22- ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தினை போக்கிடும் வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேருந்து  பயண அட்டையைப் புதுப்பித்து வழங்கிட சிறப்பு முகாம்  வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில்  நடைபெறும் இம்முகாமில் புகைப்படம்-6, தேசிய அடையாள  அட்டை நகல்-2 பழைய பேருந்து சலுகை அட்டை அசல்  ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அபராதம் விதித்து, போலீசார் எச்சரிக்கை

கோவை, மார்ச் 22- கோவை மாநகர பகுதியில் தாறுமாறாக சாலையோரங் களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்த  போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை  விடுத்தனர். கோவை, ரயில் நிலையம், டவுன்ஹால், காந்திபுரம்  உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அதிகளவு போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. பல்வேறு பணிகளுக்காக மாநகரத் திற்கு வருபவர்கள் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாக னங்களை தாறுமாறாக சாலையோரங்களில் நிறுத்தி விட்டுச்  செல்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் நெரிசல் மிகுந்த சாலையோரங்களின் பல இடங் களில் நோ பார்க்கிங் போர்டுகள் வைத்தனர். ஆனால்,  படிப்படியாக கட்டுப்பாடுகளை மீறி தொடர்ந்து சாலை யோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கிறது.  இதனை தவிர்க்கும் வகையில், புதனன்று நோ பார்க்கிங் கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கியால் எச்சரிக்கை விடுத்தனர். இதனையும் மீறி, அகற்றப்படாத வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், அதிக நேரம் நிற்கும் வாகனங்கள் கண்டறிந்து, அதன் பதிவெண்களை கணக்கெடுத்து அபராதம் விதிப்பது போன்ற  நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

காவலர்களை சிறைபிடித்த காட்டுயானை

உதகை, மார்ச் 22- கோத்தகிரி அருகே சோதனைச்சாவடி பணியிலிருந்த காவலர்களை, நள்ளிரவு நேரத்தில் உலா வந்த காட்டுயானை இரண்டு  மணி நேரம் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண்  காட்டுயானை ஒன்று உலா வருகிறது. இந்த  யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவதும், சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற செயலில்  ஈடுபட்டு வருகிறது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று நள்ளிரவில் கோத்தகிரி -  மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை போலீசார் சோதனைச்சாவடியில் காவலர்கள் இரவு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்த ஒற்றை ஆண் காட்டுயானை காவலர்கள் தங்கியிருந்த சோதனைச்சாவடி அருகே வந்தது. இதனால் அச்சமடைந்த காவலர் கள் சுமார் இரண்டு மணி நேரம் சோதனைச் சாவடி கட்டிடத்திற்குள் முடங்கினர். இதை யடுத்து அந்த ஆண் காட்டுயானை யாருக்கும்  எந்த இடையூறும் செய்யாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

நூதன முறையில் வழிப்பறி

கோவை, மார்ச் 22- முகவரி விசாரிப்பது போன்று தாலி சங்கிலியை பறித்து சென்ற நபரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். கோவை மாவட்டம், வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவர்  செவ்வாயன்று இரவு கணவர் ஆனந்த வேலுடன் அருகிலுள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு  திரும்பியுள்ளனர். அதேசமயம் இவர்களை இருசக்கர வாகனத்தில் இருவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். குஷ்பூ – ஆனந்த வேல் ஆகியோர் வீட்டை அடைந்த நிலை யில், பின்தொடந்து வந்த இருவரில் ஒருவர்  வாகனத்தில் அமர்ந்தபடி, குஷ்பூவிடம் ஒரு  முகவரி கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க துவங்கிய நிலையில், குஷ்பூவின் கழுத்தி லிருந்த நாலரை சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக ஆனந்தவேல் சத்தமிட்டதை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் இருவரை யும் தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர் மட்டும்  பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாக னத்தில் தப்பிச் சென்றார். பிடிபட்ட நபரை துடி யலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  மேலும் அவர் கையில் நகைகள் இருந்த தால் அனைத்து நகைகளும் கைப்பற்றப் பட்டது. இதன்பின் காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர்  சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்  (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில்  அடைத்தனர். மேலும், தப்பிச்சென்ற பீள மேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை  தேடி வருகின்றனர்.

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

தருமபுரி, மார்ச் 22- பொம்மிடி அருகே சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை  அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே  உள்ள பி.துரிஞ்சிபட்டியில் உள்ள மாரி யம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு,  மசூதி தெரு, போயர் காலனி போன்ற பகுதி களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இக்குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதுமான கால்வாய் வசதி இல்லாத காரணத்தால், துறிஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில்  உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே செல்லும்  நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், இப் ்பகுதியில் செல்லும் பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலை யில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக இப் பகுதியில் மழை பெய்யும் போதும், சாதாரண   நாட்களிலும் மழைநீர் தேங்கி, அதனுடன் கழிவுநீரும் கலந்து குளம் போல காட்சி யளிக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற் படும் அபாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நெடுஞ் சாலைத்துறையினர், ஊராட்சி ஒன்றிய அதி காரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத் தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டத் துவங்கியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற  நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, மார்ச் 22- பருவமழை இல்லாமல் காய்ந்து போன  தென்னை மரங்களை அகற்ற அரசு நிவார ணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்ப ளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் கணிசமான வரு மானத்தை விவசாயிகள் பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இல்லை. தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற  முடியாமல் தென்னை மரங்கள் காய்ந்து போனது. இப்பகுதியில் பல இடங்களில் விவ சாய நிலங்களில் அகற்றப்படாத தென்னை மரங்கள் காணப்படுகிறது. இதனை முழுமை யாக அகற்ற ஏக்கர் ஒன்றுக்கு பல ஆயிரம்  ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள் ளது.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,  பருவமழையால் காய்ந்து போன தென்னை  மரங்களை அகற்ற பல ஆயிரம் ரூபாய்  செலவு ஏற்படும். முன்பு செங்கல் சூளை உரி மையாளர்கள் காய்ந்து போன மரங்களை  எடுத்து சென்றனர். ஆனால் பல புதிய தொழில் நுட்பங்கள் செங்கல் சூளைக்கு வந்ததால், இப் போது மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இதனால் மரங்களை எங்களால் அகற்ற முடியவில்லை. நிலங்களில் விவசா யம் எதுவும் செய்யமுடியாமல் இருக்கி றோம். தமிழக அரசு காய்ந்து போன தென்னை  மரங்களை அகற்ற எங்களுக்கு உரிய நிவா ரணம் தர வேண்டும், என்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு: கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு

திருப்பூர், மார்ச் 22 – அலகுமலை ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் கிராமசபை கூட்டத்தை புறக் கணித்தனர். திருப்பூர் மாவட்டம், அலகுமலை யில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்  போது ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இதனால் அப்பகு தியில் குப்பைகள் அதிகளவில்  சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதா கவும், உள்ளூர் மக்களுக்கும், விவ சாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவ தாக கூறி கடந்த கிராம சபை கூட்டத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி அலகுமலை பகு தியில் நடத்தப்படாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜல்லிக் கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி யடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற் றும் அலகுமலை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் புதனன்று நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, வருகை பதிவேட்டில் கையெழுத்திட மறுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் எட்டப் படாததை அடுத்து திருப்பூர் தெற்கு வட் டாட்சியர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த கிராம சபை கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் மீது நடவ டிக்கை இல்லை என்பதால் ஜல்லிக் கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக இறுதி முடிவு எட்டும் வரை கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்போம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அணைகளின் நிலவரம் 

அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.11/60அடி நீர்வரத்து:820கன அடி வெளியேற்றம்:119கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:51.94/90அடி.நீர்வரத்து:78கனஅடி வெளியேற்றம்:60கனஅடி

கன்றுகள் இறப்பு

திருப்பூர்  மார்ச் 22- திருப்பூர் அருகே நாச்சி பாளையம் சாமிநாதன் என்ற  விவசாயி வளர்த்த பசு 3 கன்றுகளை ஈன்றது.  இரவு 1 மணி முதல் கால்நடை  மருத்துவர்களை தொடர்பு கொண்டும் யாரும் வராத  சூழலில் 2 கன்றுகள் உயிரி ழந்தன.

தூய்மையான காற்றை கொடுங்கள் பேச்சுவார்த்தையில் பெண்கள் குமுறல்

திருப்பூர், மார்ச் 22- பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி நிலை யில், நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது “தூய்மையான காற்றை கொடுங்கள்” என பொதுமக்கள் கண்ணீருடன் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அனுப்பட்டி கிரா மத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையிலும், சட்ட விரோதமாக தனியார் இரும்பு உருக்காலை இயங்கி வருவதா கக்கூறி கடந்த 5 நாட்களாக அனுப்பட்டி கிராமமக்கள் தொடர்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கிராமமக்களை அழைத்து அமைதி பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரமாக நீடித்த இந்த  அமைதி பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் மற்றும் விவசாய  சங்க நிர்வாகிகள் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இரும்பு உருக்காலை பின்பற்றாத அரசு விதிமுறைகள் குறித் தும், வட்டாட்சியரிடம் முறையிட்டனர். மேலும், ஆலை இயங் குவதற்கான உரிமம், குறித்த ஆவணங்களை கேட்டபோது  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த ஆவணங்களை யும் தராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமம் குறித்த ஆவணத்தை வட் டாட்சியரிடம் சமர்ப்பித்தனர். அதில் 2014 ஆம் ஆண்டு அளித்த உரிமம் 2015 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களாக முறையான உரிமம் பெறாமல் ஆலை இயங்கி வருவது தெரியவந்தது. மேலும், மார்ச் 23  ஆம் தேதி (இன்று)-யுடன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்  அளிக்கப்பட்ட உரிமம் காலாவதியகும் நிலையில், மீண்டும்  உரிமத்தை புதுப்பிக்க ஆலை நிர்வாகம் சார்பில் சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் கேட்ட ஆவணங் களை அதிகாரிகள் வழங்காததால் கடந்த ஐந்து மணி நேரமாக அமைதி பேச்சுவார்த்தை நீடித்தது. மேலும், பேச்சுவார்த்தை யில் கலந்து கொள்ள வந்த மேலும் சில கிராம மக்களை வட் டாட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், எங்கள் ஊருக்கு தொழில் பூங்காவோ மேம்பாலமோ நாங்கள் கேட்க வில்லை. தாங்கள் சுவாசிக்க தூய்மையான காற்றை கொடுங் கள். எங்கள் அடுத்த சந்ததியினரை வாழ விடுங்கள் எனவும்  எந்தவொரு ஆவணங்களையும் முறையாக அரசுக்கு சமர்ப்பிக் காமல் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் இந்த  ஆலையை மூட வேண்டும், என்றனர்.

“பசியாற்ற அணையா அடுப்பு” துவக்கம்

கோவை, மார்ச் 22- கோவையில் 18 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை ஜீவ சாந்தி அறக்கட்டளையினர் அடக்கம் செய்து வருகின்ற னர். இவர்கள் தற்போது ஆதரவற்ற ஏழை, எளியோருக்கு பசி யாற்றும் வகையில் அணையா அடுப்பு சமுதாய சமையற் கூடத்தை துவக்கியுள்ளனர். இதனை குருஜி சுவாமிகள், பாதி ரியார்கள், துஆக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் துவக்கி வைத்தனர். இந்த முயற்சி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு

உதகை, மார்ச் 22- குன்னூர் அருகே 40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன் னூர் அருகே உள்ள வண் ணாரப்பேட்டை பகுதியி லுள்ள தனியார் இடத்தில் பாழடைந்த கிணறு ஒன்று  நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகி றது. சுற்றிலும் புதர்கள் மண்டி  காணப்பட்ட நிலையில், அவ் வழியே சென்ற காட்டெருமை ஒன்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 40 அடி கொண்ட கிணறு என்ப தால் காட்டுமாடு தெரியாத அளவிற்கு ஆழமாக சென் றது. இதன் சத்தம் கேட்ட அப் பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு மற்றும் தீய ணைப்பு துறையினருக்கு தக வல் அளித்தனர். இதைய டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை யினர் மற்றும் தீயணைப்பு  துறையினர் கிணற்றை பொக் லைன் கொண்டு தோண்டும்  பணியில் ஈடுபட்டனர். 40 அடி வரை தோண்டி பின்னர் காட் டெருமையை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் போராடி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகு திக்குள் விட்டனர்.

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

ஈரோடு, மார்ச் 23- ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட் டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 9 மணி  நேரம் சோதனையிட்டனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலு வலராக செயல்பட்டவர் மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் (47). இவர்  பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவர் பல்லா வரம் நகராட்சியில் ஆணையராக இருந் தபோது இவர் மீது ஊழல் தடுப்பு சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந் தனர். அதில் விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அளித் தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டி ருந்தது. இதுதொடர்பாக சென்னை  லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சிவ குமார் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் செவ் வாயன்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையர் வீட்டில் சோதனையிட்டனர்.   அப்போது சென்னையிலிருந்த ஆணையர் சிவகுமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்த நிலையில், ஈரோடு வீட்டுக்கு வந்தார். அதன்பின னர் சுமார் 9 மணி நேரம் நடந்த சோதனை யில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினர் சிவகுமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் துள்ளதாகத் தெரிகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு

ஈரோடு, மார்ச் 22- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகு வாக குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். மேலும் ஈரோடு, கரூர், திருப் பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.  இந்நிலையில். கடந்த சில நாட்களாக  பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிகளவில் தண் ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணை யின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகி றது. புதனன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 90.15 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு விநாடிக்கு 704 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு  200 கனஅடி என மொத்தம் அணையிலி ருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மருத்துவர் இல்லாததால் குழந்தை பலி: உறவினர்கள் போராட்டம்

உதகை, மார்ச் 22- குன்னூரில் மருத்துவர் இல்லாத தால் குழந்தை இறந்ததாக கூறி உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி, குன்னூர் எம்ஜிஆர் நக ரைச் சேர்ந்தவர் மணிமாறன் வீட்டிற்கு, உறவினரான பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்தி, காளியம்மன் மற்றும் மகள் சரண்யா (3) ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில், மணிமாறன் வீட்டில் தண் ணீர் சுட வைத்தபோது, சரண்யா கொதி நீரில் தவறி விழுந்து, தீ காயமடைந் தார். இதையடுத்து அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை நேரத்தில் இருக்க வேண்டிய மருத்துவர் மருத்துவமனைக்கு வர வில்லை. மேல் சிகிச்சைக்காக ஆம்பு லன்ஸ் கேட்டும், இறுதி வரை வர வில்லை. அப்போது, குழந்தைக்கு ஜூஸ் குடிக்க கொடுக்கும் படி செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி உற வினர்கள் குழந்தைக்கு ஜூஸ் கொடுத்த நிலையில், திடீரென குழந்தை வாயில் நுரை தள்ளி உயிரிழந்துள்ளது‌. அதன்பின் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர், குழந்தைக்கு ஏன் ஜூஸ் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி னார். இதனால் ஆவேசமடைந்த குழந் தையின் உறவினர்கள் மருத்துவமனை யில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவ றான சிகிச்சையால் குழந்தை இறந்து விட்டதாகக்கூறி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார் சிறப்பு முகாம்

கோவை, மார்ச் 22- கோவை அஞ்சல் கோட் டம் சார்பில் ஆதார் சிறப்பு  முகாம் மார்ச் 25, 26 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள் ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் அட்டை புதுபித் தல், புதியதாக விண்ணப் பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். கோவை தலைமை தபால் நிலையத் தில் நடைபெறும் இந்நிகழ்ச் சியில் பொதுமக்கள் கலந்து  கொண்டு பயன்பெறலாம் என கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்.