கோவை, ஜூலை 23- மருதமலை அருகே அதிகாலையில் வந்த யானை கூட்டத் தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கோவை மாவட்டம், தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கு வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட யானை கூட்டம், அங்குள்ள விவசாயப் பயிர்களை சேதப்ப டுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த யானைகள் குடியிருப்பு பகுதி களுக்கும் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி, உணவு பொருட் களை தேடுவதால், மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை 5 மணி அள வில், மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதிக்குள் அந்த யானை கூட்டம் புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானை கூட் டத்தை மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். முன்னதாக, யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சியை, அங்குள்ளவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.